சமீபகாலமாக பிரபல நடிகர்களின் படங்களை  அதிகாலைக்காட்சிகளாக வெளியிடும் ஒரு ட்ரெண்ட் சென்னையில் பெரும்பாலான தியேட்டர்களில் நடைமுறையில் உள்ளது. அந்த அதிகப்படியான காட்சிகள் முறைப்படி அனுமதி பெற்று நடைபெறுகிறதா, அப்படியானால் யார் அதற்கு அனுமதி தருகிறார்கள் என்கிற கேள்விகளுடன் கோர்ட்டில் வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது.

சமீபகாலமாக பிரபல நடிகர்களின் படங்களை அதிகாலைக்காட்சிகளாக வெளியிடும் ஒரு ட்ரெண்ட் சென்னையில் பெரும்பாலான தியேட்டர்களில் நடைமுறையில் உள்ளது. அந்த அதிகப்படியான காட்சிகள் முறைப்படி அனுமதி பெற்று நடைபெறுகிறதா, அப்படியானால் யார் அதற்கு அனுமதி தருகிறார்கள் என்கிற கேள்விகளுடன் கோர்ட்டில் வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கேரளாவில் உள்ள திரையரங்கு ஒன்றில், நடிகர் விஜய்யின் சர்கார் படத்தைக் கொண்டாடும் விதமாக, தொடர்ந்து 24 மணிநேரம், 8 காட்சிகள் திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நடிகர் விஜய்யின் கோட்டையாக கருதப்படும் கேரளாவில், ’சர்கார்’ படத்தைக் காண இப்போதே ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். அந்த வகையில், கேரளா திருச்சூரில் உள்ள தாய்க்குலம் கார்த்திக் என்ற திரையரங்கு ‘சர்கார் மாரத்தானிற்கு’ ஏற்பாடு செய்துள்ளது. 

அதன்படி, ’சர்கார்’ வெளியாகும் 6 ஆம் தேதி காலை 5 மணிமுதல், அடுத்த 24 மணிநேரத்திற்கு சர்கார் படத்தை திரையிட உள்ளது. இதில், காலை 5 மணி, காலை 8 மணி,காலை 11.30 மணி, மதியம் 3 மணி, மாலை 6.15 மணி, இரவு 9.15 மணி, இரவு 11.55 மணி, மறுநாள் விடியற்காலை 2.45 மணி என மொத்தம் 8 காட்சிகள் திரையிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் அதிகபட்சமாக 6 காட்சிகள் மட்டுமே நடத்தப்படும் நிலையில் 8 காட்சிகள் நடக்கும் ‘மாரத்தான் சர்கார்’ தற்போது வலைதளங்களில் பரபரப்பான செய்தியாகிவருகிறது.