Asianet News TamilAsianet News Tamil

சந்தானத்தின் நெருங்கிய உறவினர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு! திட்டமிட்ட கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

தன்னுடைய பாணியில், காமெடி கலந்த ஹீரோக்கள் கதையை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் சந்தானம் குடும்பத்தினரின், நெருங்கிய உறவினர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

santhanam close relative death in accident police brief investigation
Author
Chennai, First Published May 23, 2021, 12:52 PM IST

தன்னுடைய பாணியில், காமெடி கலந்த ஹீரோக்கள் கதையை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் சந்தானம் குடும்பத்தினரின், நெருங்கிய உறவினர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்தானத்தின் நெருங்கிய உறவினர் பெண் ஜெயபாரதி. இவருக்கும் அமெரிக்காவை சேர்ந்த மென்பொருளாளர், விஷ்ணு பிரகாஷ் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் பெற்றோர் விருப்பப்படி திருமணம் நடந்துள்ளது.

மேலும் செய்திகள்: நினைவை விட்டு நீங்காத 'பாண்டியன் ஸ்டோர்' சித்ரா...! பலரும் பார்த்திடாத ரேர் போட்டோஸ்..!
 

திருமணத்திற்கு பின், ஜெயபாரதி கணவருடன் அமெரிக்காவுக்கே சென்றார். ஆரம்பத்தில் வாழ்க்கை இனிமையானதாக இருந்தாலும், பின்னர், இருவருக்கு இடையிலும் ஒரு சில கருத்து வேறுபாடுகள் எழுந்தது. இதனால், ஒரு கட்டத்தில் ஜெயபாரதி அமெரிக்காவில் இருந்து மகளுடன் சென்னைக்கு வந்து பெற்றோருடன் வாசிக்க துவங்கினார். 

santhanam close relative death in accident police brief investigation

மேலும், சென்னை தபால் அலுவலகத்தில், தற்காலிக பணியாராக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கணவர் குறித்து அவர் பணியாற்றும் அலுவலகத்தில் ஜெயபாரதி புகார் கூறி இருந்ததாகவும், இதனால் இவரது கணவர் விஷ்ணு பிரகாஷ் அந்த புகாரை திரும்ப  பெறக்கூறி மிரட்டல் விடுத்தது வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: நயன்தாராவை அடுத்து தடுப்பூசி சர்ச்சையில் சிக்கிய கீர்த்தி சுரேஷ்! ஊசியே காணும் என்று கலாய்க்கும் நெட்டிசன்கள்!
 

santhanam close relative death in accident police brief investigation

இந்நிலையில், ஜெயபாரதி தன்னுடைய பணியை முடித்து கொண்டு வீடு திரும்பிய போது, ஏடிஎம் மற்றும் வங்கிகளுக்கு பணம் ஏற்றி செல்லும், மினி டிரக் மோதியதில் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், ஜெயபாரதியின் பெற்றோர்... இவரது கணவர் விஷ்ணு பிரகாஷ் மீதி சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளதை தொடர்ந்து, இது எதேர்சையாக நடந்ததா? அல்லது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையா என்கிற சந்தேகத்தில் அடிப்படியில் விசாரணை செய்து வருகிறார்கள்.


 

Follow Us:
Download App:
  • android
  • ios