ரஜினியைத் தொடர்ந்து புனித் ராஜ்குமார்.. அடுத்தடுத்து மருத்துவமனையில் அட்மிட்டாகும் சூப்பர் ஸ்டார் நடிகர்கள்..!
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார், நடிகர் புனித் ராஜ்குமார் (Puneeth Rajkumar) பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் (Vikram Hospital) மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார், நடிகர் புனித் ராஜ்குமார் பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்: Breaking: 'அண்ணாத்த' படத்தை சட்ட விரோதமாக இணைய தளங்களில் வெளியிட தடை..!
நேற்றைய தினம், தன்னுடைய பேரனுடன் (அக்டோபர் 26 ) ஆம் தேதி, தீபாவளிக்கு வரவிருக்கும் 'அண்ணாத்த' படத்தை பார்த்ததாக மிகவும் சந்தோஷமாக 'Hoote' ஆப்-மூலம் தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருந்த கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் என நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்க பட்டதாக வெளியான தகவலின், அதிர்ச்சியில் இருந்து தற்போது வரை ரசிகர்கள், மற்றும் திரை பிரபலங்கள் வெளியே வரவில்லை.
மேலும் செய்திகள்: சீரியல் நடிகையை கொலை செய்ய துடிக்கும் காதலனின் தந்தை..! முன்னாள் கணவர் போலீசில் பரபரப்பு புகார்..!
ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து லதா ரஜினிகாந்த் தெரிவித்த போது, ஆண்டு தோறும் ரஜினிகாந்துக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். அதே போன்று இந்த ஆண்டுக்கான முழு உடல் பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் நலமுடன் இருக்கிறார் என்று அறிவித்தார். இருப்பினும் ரஜினிகாந்த் உடம்பில் ரத்த குழாயில் திடீரென அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டம் தடைப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு மாற்றப்பட்ட சிறுநீரகத்தின் செயல்திறன் திடீரென குறைந்ததால் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார் என்று தகவல்கள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.
மேலும் செய்திகள்: சேலைக்குள் சோலையாய் புன்னகை பூத்த வாணி போஜன்!! சிகப்புச் சேலையில் கௌதமியை நினைவுபடுத்துறாங்களே!!
மருத்துவமனை நிர்வாகவும், ரஜினிகாந்த் உடல் நிலைய சீராக இருப்பதாக தெரிவித்துள்ளதாக மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பல்வேறு கேள்விகள் ரஜினிகாந்தை சுற்றி வரும் நிலையில், ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் செய்திகள்: 3 வாரத்திற்கு பின் ஷாருகான் முகத்தில் எட்டி பார்த்த புன்னகை! ஆர்யன் ஜாமீனை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்!
தலைவர் சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து, தற்போது சாண்டில்வுட் சூப்பர் ஸ்டாரான புனித்ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், "ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது திடீர் என நெஞ்சு வலிப்பதாக புனித்ராஜ் குமார் கூறியதை தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகள்: என்னம்மா இவ்வளவு பெருசா இருக்கே? 'குக் வித் கோமாளி' பவித்ரா லட்சுமியின் ஸ்டைலிஷ் உடைக்கு தெறிக்கும் கமெண்ட்ஸ்
மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக ஈசிஜி உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை செய்து வருவதாகவும், லேசான மாரடைப்பு காரணமாகவே புனித்ராஜ் குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் பெரிய அளவில் ஆபத்தில்லை என்று கூறப்பட்டு வந்தாலும், அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடப்படவில்லை. புனித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி தெரிந்தவுடன், அவரது ரசிகர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். இதனால் மருத்துவமனை அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் நடிகர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.