சமந்தாவுடன் இப்போதைக்கு குழந்தை பெற்றுக் கொள்ளப்போவதில்லை! கணவர் நாக சைத்தன்யா முடிவு! காரணம் இது தான்
நடிகை சமந்தா தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்று, அவரது கணவர் நாக சைதன்யா விளக்கம் அளித்துள்ளார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு ஏ மாய சேசாவே என்ற படத்தின் மூலமாக, தெலுங்கு சினிமாவில் நடிகை சமந்தா அறிமுகம் ஆனார். அந்த படத்தின் ஹீரோவாக, நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யா நடித்திருந்தார். பின்னர் ஏ மாய சேசேவா படம், தமிழில் விண்ணைத் தாண்டி வருவாயா என்ற பெயரில், சிம்பு, திரிஷா நடிப்பில் வெளியானது. இதன்பின், நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, கத்தி உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்த சமந்தா, ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக உருவெடுத்தார். நீண்ட நாட்களாகவே, நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வந்த சமந்தா, கடந்த ஆண்டில் அவரை திருமணம் செய்துகொண்டார். இதன்பின் அவர் நடிக்க மாட்டார் எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திருமணம் முடிந்து சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அரிதாரம் பூசி, நடிக்கத் தொடங்கினார். திருமணத்திற்கு பிறகு பெரும்பாலான நடிகைகளுக்கு சரிவே ஏற்படும் என்றாலும், சமந்தா நடிப்பில் வெளியான மகாநதி, இரும்புதிரை, ரங்கஸ்தலம் ஆகிய படங்கள் ஹிட்டாகின. இதனால், யூடர்ன் சீமராஜா, சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களிலும் நடித்து வரும் சமந்தா, அடுத்தடுத்த படங்களிலும் நடிக்கவும் புக் ஆகியுள்ளார். எனினும், இந்த படங்களின் படப்பிடிப்புக்குப் பின்னர், புதியதாக வேறு எந்த படத்திலும் கமிட் ஆகமாட்டார் எனக் கூறப்படுகிறது. நடிகை சமந்தா நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு, குழந்தை பெற்றுக் கொண்டு இல்லற வாழ்க்கை நடத்த தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால், திடீர் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சமந்தாவின் கணவர் நாக சைதன்யா தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், தற்காலிகமாக சினிமாவில் இருந்து சமந்தா ஓய்வு எடுப்பார். ஆனால், நடிப்பை நிரந்தரமாக கைவிட மாட்டார். அவருக்கு நடிப்புதான் முழு நேர தொழில், வாழ்க்கை, என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் தற்போதைக்கு சமந்தா குழந்தை பெற்றுக் கொள்ளப்போவதில்லை என்பது மட்டும் தெளிவாகிறது.