Asianet News TamilAsianet News Tamil

போதை பொருள் விவகாரம்..! ரியா சக்ரபோர்த்தி ஜாமீன் மீது நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பாலிவுட் திரையுள்ளனர் மத்தியில் தற்போது வரை மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 

Rhea Chakraborty  Bail Denied
Author
Mumbai, First Published Sep 11, 2020, 1:34 PM IST

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பாலிவுட் திரையுள்ளனர் மத்தியில் தற்போது வரை மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இவரின் மரணம் குறித்து அவரது தந்தை கே.கே.சிங் பீகார் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில், தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ., அமலாக்கத்துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகிய 3 முகமைகள் விசாரணை நடத்தி வருகின்றன.

Rhea Chakraborty  Bail Denied

போதைப்பொருள் பயன்படுத்தியது, வாங்கியது, விற்றது தொடர்பாக சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தியின் தம்பி சோவிக், நடிகர் சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் திபேஷ் சாவந்த் உள்ளிட்ட 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பின்னர் போதைப்பொருள் கும்பலுடன் நடிகை ரியாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடிகை ரியாவிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் வெளியே வந்த நடிகை ரியா, தனக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இல்லை என்றும், சுஷாந்த் சிங்கிற்கு அந்த பழக்கம் இருந்தது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

Rhea Chakraborty  Bail Denied

இதையடுத்து தொடர்ந்து மூன்று நாட்கள் ரியா சத்ராபார்த்தியிடம் விசாரணை நடத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், செப்டம்பர் 8 ஆம் தேதி, 
ரியாவை  கைது செய்தனர்.

இந்நிலையில், ரியா தரப்பில் இருந்து ஜாமீன் கோரி , மும்பை சிறப்பு நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த ரியாவின் ஜாமீன் மனுவை விசாரித்த மும்பை சிறப்பு நீதி மன்றம், ரியா சக்ரபோர்த்திக்கு ஜாமீன் வழக்க மறுத்துவிட்டது. 

Follow Us:
Download App:
  • android
  • ios