Ranbirkapoor |போதைபழக்கத்தை கைவிட ரன்பீர் கபூர் என்ன செய்தார் தெரியுமா? இங்குமா ஊசி போடுவாங்க !!
பாலிவுட் பிரபலம் ரன்பீர் கபூர் புகைபிடிப்பதை நிறுத்துவதற்காக எடுத்துக்கொண்ட சிகிச்சை குறித்து சமீபத்தில் கூறிய தகவல் வைரலாகி வருகிறது.
ரன்பீர் கபூர் தற்போது சிறந்த பாலிவுட் நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளார். ரன்பீர் கபூர் தற்போது பிரம்மாஸ்திரா, அனிமல், ஷம்ஷேரா, ராமாயணம் மற்றும் லவ் ரஞ்சனின் பெயரிடப்படாத திரைப்படம் உள்ளிட்ட ஏராளமான படங்களை தன கையில் வைத்துள்ளார்.
இவர் அவ்வப்போது உடைத்து வரும் வாழ்க்கை ரகசியங்கள் வைரலாகி வருவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் தான் 15 வயதிலிருந்து போதை பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தாக வெளிப்படையாக கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்தார் ரன்பீர் கபூர்.
இதுகுறித்து பேசிய ரன்பீர் கபூர், “நான் நான்கு மாதங்கள் புகைபிடிப்பதை விட்டுவிட்டேன், பின்னர் கடந்த மாதம் தான் மீண்டும் சிகரெட்டை பிடிக்க ஆரம்பித்தேன் - ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு. நான் 15 வயதிலிருந்தே நிகோடின் அடிமையாக இருந்ததால் இது எனக்கு பயமாக இருக்கிறது, மேலும் இது மிகவும் மோசமான போதை. இந்த பழக்கத்தை கைவிட நான் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றேன், அங்கு என் காதுகளில் ஊசி போடப்பட்டது. ஆனால் புகைப்பழக்கத்தை கைவிட எனக்கு மன உறுதி இல்லை என்று நினைக்கிறேன். இதனால் எனக்கு அந்த சிகிச்சை வேலை செய்யவில்லை - நீங்கள் ஒரு பழக்கத்தை இன்னொருவருக்கு விட்டுவிட முடியாது. இறுதியில், அது இன்னும் மூர்க்கமாகத் திரும்பும்." என்று கூறியுள்ளார்.
ரன்பீர் கபூர் புகைபிடிப்பதைப் பற்றி பேசுவது இது முதல் முறை அல்ல, முன்னதாக பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த இவர்; நியூயார்க்கில் உள்ள நடிப்புப் பள்ளியில் படிக்கும் போது புகைத்தேன், அதோடு, “ராக்ஸ்டார் படப்பிடிப்பின் போது நான் அதை மீண்டும் பயன்படுத்தினேன். இந்த முறை ஒரு நடிப்பு கருவியாக. படப்பிடிப்பு தளத்திலிருந்த 300 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் உண்மையான பார்வையாளர்களாகக் காட்சியளிக்கும் போது மேடையில் செல்வது கடினமாக இருந்தது. அந்த தருணங்களை உண்மையானதாக உணர வைத்தது, இப்போது மிகவும் பிஸியாக இருப்பதால் புகைபிடிப்பதை விட்டுவிட்டேன். புகைபிடிப்பதால் வரும் குறுகிய கால மகிழ்ச்சி பின்னர் தரும் இழப்பைத் தாங்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.