ரஜினி அரசியலுக்கு வந்தால்தான் தனது முதல் வாக்கை செலுத்துவேன் என கடந்த 30 ஆண்டுகளாக வாக்களிக்காமல் இருந்து வந்துள்ளார். அவருடைய மனைவி தேர்தலில் போட்டியிட்டப்போது கூட மகேந்திரன் வாக்களிக்கவில்லையாம்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில், கடந்த 30 ஆண்டுகளாக ஓட்டு போடாமல் இருந்து வந்த நடிகர் ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர், தற்போது முதன்முறையாக வாக்களித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் மகேந்திரன். 48 வயதாகும் இவர் சிறுவயதில் இருந்தே நடிகர் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். 

ரஜினி அரசியலுக்கு வந்தால்தான் தனது முதல் வாக்கை செலுத்துவேன் என கடந்த 30 ஆண்டுகளாக வாக்களிக்காமல் இருந்து வந்துள்ளார். அவருடைய மனைவி தேர்தலில் போட்டியிட்டப்போது கூட மகேந்திரன் வாக்களிக்கவில்லையாம்.

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவார் என கடந்த 30 ஆண்டுகளாக காத்திருந்தார் மகேந்திரன். ஆனால் இனி அரசியலுக்கு வரப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தது மகேந்திரனுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இதையடுத்து திமுக-வில் இணைந்த மகேந்திரன், தற்போது நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதன்முறையாக வாக்களித்துள்ளார்.