நடிகர் ரஜினிகாந்துக்கு ராக்கி (Rocky) திரைப்படம் மிகவும் பிடித்துப் போனதால், அவர் பாரதிராஜா மற்றும் வஸந்த் ரவியை நேரில் அழைத்து பாராட்டினார்.
இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் 6 வருடமாக காதலித்து வருகின்றனர். காதலைப் போல் சினிமாவிலும் ஜொலித்து வரும் இவர்கள், கடந்தாண்டு ரவுடி பிக்சர்ஸ் என்கிற பட நிறுவனம் ஒன்றை தொடங்கினர். அந்நிறுவனம் மூலம் படங்களை தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் சில படங்களை வெளியிட்டும் வருகின்றனர்.
அந்த வகையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வஸந்த் ரவி, ரவீனா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ராக்கி' (Rocky) படத்தின் வெளியீட்டு உரிமையையும் அவர்கள் கடந்தாண்டு கைப்பற்றினர். இருப்பினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தை கடந்த ஓராண்டாக வெளியிடாமல் இருந்தனர்.

தற்போது கிறிஸ்துமஸ் விருந்தாக இப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. ரஜினி, தனுஷ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் இப்படத்தை பார்த்து வெகுவாக பாராட்டினர்.
குறிப்பாக ரஜினிகாந்துக்கு (Rajinikanth) இப்படம் மிகவும் பிடித்துப் போனதால், அவர் பாரதிராஜா மற்றும் வஸந்த் ரவியை நேரில் அழைத்து பாராட்டினார். அந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில், இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பாக வெளியிட்ட விக்னேஷ் சிவனை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தி உள்ளார் ரஜினி. இந்த மகிழ்ச்சியான தருணம் குறித்து விக்னேஷ் சிவன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: தலைவர் ரஜினிகாந்திடம் இருந்து அழைப்பு வந்தது. ராக்கி படத்தை வெளியிட்டதற்காக என்னையும், நயன்தாராவையும் பாராட்டி அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் எனது காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. தலைவரின் பேசியது எங்களுக்கு மிகுந்த பலமாக அமைந்தது. இந்த உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
