நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நடிகர் சரத்குமார் மற்றும் ராதா ரவி நீக்கியதை தொடர்ந்து.

நடிகை ராதிகா சரத்குமார், பொருளாளர் கார்த்தியிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி டுவிட் செய்துள்ளார். 

இவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவுகள் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் நிரந்தர அறங்காவலர்கள் என்று தாங்களே நியமித்துக்கொண்டனர் என்று கூறுகிறீர்களே உங்களிடம் எதாவது ஆதாரம் உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார்?

அதேபோல் இருதரப்பும் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட இந்த முடிவு நீதிமன்ற அவமதிப்பாகும். 

திடீரென்று இடத்தை மாற்ற உங்களுக்கு எந்த ஆணையர் அனுமதி கொடுத்தார் என்றும். அதை என்னிடம் காண்பியுங்கள் நான் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

ஒரு ஆயுட்கால உறுப்பினரான என்னிடம் ஏன் எதையும் தெரிவிக்கவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் விஷாலிடம் முதிர்ச்சி இல்லை. நீங்களும் உங்கள் முட்டாள்தனத்தைக் காட்டாதீர்கள். எந்த கணக்கும் ஒப்படைக்கப்படவில்லை என்றீர்கள். உங்களுக்கு கொடுத்தது காதல் கடிதங்கள் என நினைத்தீர்களா? என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுள்ளார்.