சரத்குமார், ராதாரவி நிரந்தர நீக்கம் - விஷால் அதிரடி......!!!
நடிகர் சரத்குமார் மற்றும் ராதாரவி இருவரும் பல வருடங்களாக நடிகர் சங்கத்தில் பெரிய பொறுப்பில் இருந்தவர்கள். அவர்கள் மட்டும் அல்ல ராதாரவியின் குடும்பமே சினிமா துறையில் இருந்தவர்கள் தான் என்பது அனைவரும் அறிந்தது தான் .
இந்நிலையில் விஷால் தற்போது பொறுபேற்று இரண்டு ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் திடிரென்று பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.
இன்று நடிகர் சங்க பொது கூட்டம் சென்னையில் கூடியது. இதில் சரத்குமார் மற்றும் ராதாரவியை நிரந்தரமாக சங்கத்திலிருந்து நீக்க முடிவு செய்திருப்பதாக விஷால் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த முடிவிற்கு அனைவரும் சம்மதித்தும் விட்டார்கள் என்று கூறபடுகிறது . இந்த செய்து தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.