Asianet News TamilAsianet News Tamil

படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... மயங்கி விழுந்த பிரபல புகைப்பட கலைஞர் மாரடைப்பால் மரணம்...!

தெலுங்கில் 200க்கும் மேற்பட்ட படங்களில் ஸ்டில் கேமராமேனாக பணியாற்றியவர் ஸ்ரீனிவாஸ். 

Pushpa movie Photographer Srinivas passes away on shooting spot
Author
Chennai, First Published Jan 30, 2021, 2:45 PM IST

தெலுங்கு திரையுலகில் பலரும் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அல்லு அர்ஜுன் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி தாறுமாறு வைரலானது. முதலில் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், படத்திலிருந்து விலகினார். 

Pushpa movie Photographer Srinivas passes away on shooting spot

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மெகா பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது. ஆகஸ்ட் 13ம் தேதி அன்று படத்தை வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ராஜமுந்திரியில் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் புகைப்பட கலைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Pushpa movie Photographer Srinivas passes away on shooting spot

 

இதையும் படிங்க: “குக் வித் கோமாளி” நிகழ்ச்சிக்கு என்ன ஆச்சு?.... தேசிய அளவில் ட்ரெண்டாகும் #CookWithComali2 ஹேஷ்டேக்...!

தெலுங்கில் 200க்கும் மேற்பட்ட படங்களில் ஸ்டில் கேமராமேனாக பணியாற்றியவர் ஸ்ரீனிவாஸ். 54 வயதான ஸ்ரீனிவாஸ் புஷ்பா பட ஷூட்டிங்கின் போது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக படக்குழுவினர் அவரை அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்தது. ஶ்ரீனிவாஸ் மறைவை அடுத்து தெலுங்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios