பூட்டை உடைக்கிறார் விஷால்... தயாரிப்பாளர் சங்கத்தில் பதற்றம்..!
தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு தரப்பினர் பூட்டுப்போட்டதற்கு எதிராக பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகாரிளித்துள்ளார் விஷால். இதனையடுத்து பூட்டப்பட்டுள்ள பூட்டை உடைக்கப்போவதாக அறிவித்து விட்டு தயாரிப்பாளர் சங்கத்தை நோக்கி விஷால் ஆதரவாளர்கள் அணி வகுத்துள்ளனர்.
தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு தரப்பினர் பூட்டுப்போட்டதற்கு எதிராக பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகாரிளித்துள்ளார் விஷால். இதனையடுத்து பூட்டப்பட்டுள்ள பூட்டை உடைக்கப்போவதாக அறிவித்து விட்டு தயாரிப்பாளர் சங்கத்தை நோக்கி விஷால் ஆதரவாளர்கள் அணி வகுத்துள்ளனர்.
விஷாலின் நடவடிக்கைகள் தன்னிச்சையாக இருப்பதாகக் கூறி ஒரு தரப்பினர் தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டுப்போட்டனர். நேற்று நடந்த பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் மாலைவரை தலைமறைவாக இருந்த விஷால் இரவே வெளியே தலைகாட்டினார். பின்னர் ‘தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்குப் பூட்டுப் போட்டவர்கள் ஏற்கனவே திட்டமிட்டு தொடர்ந்து பிர்ச்சனை செய்துவந்தவர்கள்தான். அவர்களைப் பொருட்படுத்தப்போவதில்லை. சிறு தயாரிப்பாளர்கள் மேல் எந்த அக்கறையும் இல்லாதவர்கள் அவர்களை எப்படி எதிர்கொள்வது என்பது எனக்குத் தெரியும்’ என்ற அவர் தனது ஆதரவாளர்களுடன் ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஆலோசனை நடத்தினார்.
விஷால் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரது ஆதரவு தயாரிப்பாளர்கள் இன்று காலை 9 மணி முதலே சென்னை தி.நகரிலுள்ள பாண்டி பஜார் காவல் நிலையத்தை முற்றுகையிட ஆரம்பித்தனர். பாண்டிபஜார் காவல் நிலையத்தில் நேற்று எதிராளிகளால் ஒப்படைக்கப்பட்ட பூட்டை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் வைத்தனர். இதனைத் தொடர்ந்து விஷால் அணியினர் தயாரிப்பாளர் சங்கத்தை நோக்கி பூட்டை உடைப்பதற்காக அணிவகுத்துள்ளனர்.