Asianet News TamilAsianet News Tamil

விஷால் புகார் கொடுத்தது சரி தான் ஆனால்... உண்மையை உடைத்த ஆர்.பி.செளத்ரி... நடந்து என்ன?

வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்திய பிறகும் உறுதிமொழி பத்திரங்களைத் திருப்பித் தராமல் இழுத்தடிப்பதாகவும், இதுதொடர்பாக மேலும் மோசடியில் ஈடுபட வாய்புள்ளதாகவும் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது தியாகராய நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விஷால் புகார் அளித்திருந்தார்.

Producer R.B Chowdry  statement about vishal complaint
Author
Chennai, First Published Jun 17, 2021, 12:30 PM IST

நடிகர் விஷால் பிரபல தயாரிப்பாளரான ஆர்.பி.செளத்ரி மீது காவல் துணை ஆணையரிடம் புகார் கொடுத்தது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது வீட்டுப் பத்திரம் உள்ளிட்ட சில உறுதிமொழி பத்திரங்களை ஆவணங்களாக அளித்து கடன் தொகையை பெற்றாக கூறப்படுகிறது. பின்னர் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்திய பிறகும் உறுதிமொழி பத்திரங்களைத் திருப்பித் தராமல் இழுத்தடிப்பதாகவும், இதுதொடர்பாக மேலும் மோசடியில் ஈடுபட வாய்புள்ளதாகவும் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது தியாகராய நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விஷால் புகார் அளித்திருந்தார். இதற்கான முழு விளக்கம் குறித்து சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனரும், பிரபல தயாரிப்பாளருமான ஆர்.பி.செளத்ரி விளக்கமளித்துள்ளார். 

Producer R.B Chowdry  statement about vishal complaint

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நடிகர் திரு.விஷால் அவர்கள் இரும்புத்திரை படம் தயாரிக்க என்னிடம் பைனான்ஸ் வாங்கிருந்தார். அந்த படத்திற்கு நானும் விநியோகஸ்தர் திரு.திருப்பூர் சுப்பிரமணியும் சேர்ந்து பணம் கொடுத்தோம். "இரும்புத்திரை" படம் வெளியீட்டில் திரு.விஷால் எனக்கு கொடுக்கவேண்டிய பணத்தில் ஒரு தொகை பாக்கி வைத்து இருந்தார். அந்த தொகையை அவர் தயாரிக்கும் "சக்ரா" திரைப்படத்தின் வெளியீட்டில் தருவதாகவும் கூறியிருந்தார் "சக்ரா" படத்தின் வெளியீட்டின் பொழுது எனக்கு வர வேண்டிய பணத்தை திரு.திருப்பூர் சுப்பிரமணியம் தருவதாக கூறினார். நானும் அதற்கு ஒப்புக்கொண்டேன். அதன் அடிப்படையில் நானும் திரு.விஷாலும் 20-02-2021 அன்று திரு விஷாலின் வழக்கறிஞர் மூலமாக இரும்புத்திரை" "சக்ரா" ஆகிய இரு திரைப்படங்களுக்கு மட்டுமான வரவு செலவு கணக்கு முடிந்து விட்டதாக ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டோம். 

Producer R.B Chowdry  statement about vishal complaint

ஆனால் திரு.திருப்பூர் சுப்பிரமணியத்துக்கும், திரு. விஷால் அவர்களுக்கும் உள்ள "chakra" கணக்கு வழக்கு எதுவும் எனக்கு தெரியாது. இரும்புத்திரை பைனான்ஸ்க்காக (Negative Rights) எனது நிறுவனம் பெயரிலும் அத்துடன் சில உறுதிமொழி பத்திரங்களையும் கொடுத்திருந்தார். (Negative Ri.ghts) எனது நிறுவனத்தின் பெயரில் இருந்த காரணத்தால் திரு.திருப்பூர் சுப்பிரமணியம் பணத்திற்கு உத்திரவாதமாக திரு.விஷால் கொடுத்த மேற்கண்ட பத்திரங்களை (stamp paper, green sheet, pronote, cheques) திரு.திருப்பூர் சுப்பிரமணியத்தின் வரவு செலவு கணக்குகளை கையாண்ட திரு.சிவக்குமார் (திரைப்பட இயக்குனர்
அவர்களிடம் கொடுத்து திரு.திருப்பூர் சுப்பிரமணியிடத்திடம் கொடுக்க சொல்லி கொடுத்தேன், அதன் பின்பு திரு சிவக்குமார் அவர்கள் என்னை தொடர்புகொண்டு திரு.திருப்பூர் சுப்பிரமணியம் சார் அடுத்த வாரம் பெடரேஷன் மீட்டிங்க்காக சென்னை வருகிறேன் அப்போது வாங்கிக்கொள்கின்றேன் என்று திரு.திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாக திரு.சிவக்குமார் என்னிடம் கூறினார், இந்த நிலையில் திரு சிவக்குமார் அவர்கள் ஒருசில தினங்களில் மாரடைப்பால் மரணம் அடைந்துவிட்டார். 

Producer R.B Chowdry  statement about vishal complaint

அவர் திருமணமாகாதவர் என்பதால் தனி நபராக அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வந்தார், ஆகவே அவர் இறந்தது இரண்டு நாட்களுக்கு பின்புதான் மற்றவர்களுக்கே தெரியவந்தது. அதன்பின் அந்த பத்திரங்களை எங்கு வைத்தார் என்று தெரியவில்லை. எப்படியும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் அவருக்கு தெரிந்த நபர்களிடம் விசாரித்தும் இன்றுவரை கிடைக்கவில்லை. அதன்பின் கொரோனா காலம் தொடங்கிவிட்டது, இந்நேரத்தில் எனக்கும் திரு.விஷாலுக்கும் இடையில் பணம் வாங்கி கொடுக்கும் திரு.லஷ்மன் என்பவர் மூலம் அந்த பத்திரம் கிடைக்காமல் போன விஷயத்தை திரு.விஷாலுக்கு தெரிவிக்குமாறு கூறினேன். இந்த நிலையில் திரு.விஷால் அவர்கள் கடந்த 07-06-2021 காவல்துறையில் என்னிடம் கொடுத்த உறுதிமொழி பத்திரங்கள் திரும்ப கிடைக்கவில்லை என்றும், அதை வேறு யாரிடமும் இருக்கிறதா என்பதை கண்டுபிடித்து தாருங்கள் என்று புகார் ஒன்றை கொடுத்துள்ளார். 

Producer R.B Chowdry  statement about vishal complaint

அவர் கொடுத்த புகார் மிகவும் சரியானதென்றே நானும் கருதுகிறேன் ஏனெனில் வேறு யாரின் கையில் இருக்குமோ என்ற பயத்தில் அதை கொடுத்துள்ளார். ஆனால் அவர் என்னிடமும் கலந்து பேசி நாங்கள் இருவரும் சேர்ந்து புகார் அளித்திருந்தால் தெளிவாக இருந்திருக்கும். இந்த நிலையில் அந்த உறுதிமொழி பத்திரங்களை வைத்து நான் மோசடி செய்ய முயற்சிப்பதாக திரு.விஷால்  அவர்கள் புகார் செய்துள்ளார் என்ற செய்தியை ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன, இந்த செய்தி எனக்கு மிகுந்த மன வேதனை அளிக்கின்றன. நான்கு மொழிகள், 92 திரைப்படங்கள், 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் இப்படி ஒரு அவதூர் புகாரை நான் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். 

இதுவரை என்னுடைய பணம் பிறரிடம் பாக்கி வரவேண்டியதே தவிர மற்ற எவருடைய பணமும் என்னிடம் இல்லை என்பது தென்னிந்திய திரை உலகத்திற்கே தெரியும், என்னுடைய இந்த அறிக்கையின் தாமதத்திற்கு காரணம் இந்த சம்பவம் நடக்கும் சமயத்தில் நான் வெளியூரில் இருந்த காரணத்தினால் சென்னைக்கு திரும்பிய பிறகு என்னுடைய தன்னிலை விளக்கத்தை தங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

Producer R.B Chowdry  statement about vishal complaint

மேலும் ஓர் அறிவிப்பு : திரு.சிவக்குமாரிடம் இருந்த உறுதிமொழி பத்திரங்கள் (stamp paper, green sheet, pronote, cheques) அவரை சார்ந்த நபர்களிடமோ அல்லது வேறு யாரிடமோ இருந்தால் அதை என்னிடமோ, திரு விஷாலிடமோ, அல்லது காவல்துரையிடமோ ஒப்படைக்கவும், மீறி அதை வைத்திருப்பவர்களோ அல்லது பயன்படுத்த முயற்சி செய்வதோ தெரியவந்தால் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை ஊடகங்கள் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios