பிரபல மலையாள பட தயாரிப்பாளர் அரோமா மணி, உடல்நல குறைவால் தன்னுடைய 84 வயதில் காலமானார். இவருடைய மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மலையாள திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான 'அரோமா' மணி தன்னுடைய 84 வயதில் காலமான தகவல் வெளியாகி, திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அரோமா மணி, ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:30 மணியளவில் அவரது இல்லத்தில் உயிரிழந்தார். கடந்த சில வருடங்களாகவே வயது மூப்பு காரணமாக பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்தநிலையில், திடீர் என ஏற்பாட்டை மூச்சி திணறலால் உயிரிழந்தார். இவரது உடல் திங்கள்கிழமை பாரத் பவனில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.
மறைந்த தயாரிப்பாளர் அரோமே மணிக்கு, கிருஷ்ணம்மா என்கிற மனைவி இருந்த நிலையில், சில வருடங்களுக்கு முன் உயிரிழந்தார். மேலும் இவருக்கு சுனில் குமார், சுனிதா சுப்ரமணியம் மற்றும் அனில் குமார் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். மணியின் மறைவுக்கு முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் தங்களின் இரங்கல்களை தெரிவித்தனர்.
இவர் 'துருவம்', 'கமிஷனர்', 'கள்ளன் பவித்ரன்', 'மிஸ்டர்' உள்ளிட்ட ஏராளமான மலையாள வெற்றிப் படங்களைத் தயாரித்தவர் மணி. தமிழிலும் நடிகர் விக்ரம் நடித்த 'காசி', முரளி நடித்த உன்னுடன், பிரபுவுடன் நடித்த அரங்கேற்ற வேலை போன்ற 50-திற்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். அதே போல் சுமார் 7 மலையாள படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
