priyanka chopra also suffered by neerav modi

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நீரவ் மோடியின் நகைக்கடைகளுக்கு சர்வதேச அளவில் விளம்பரத் தூதராக இருந்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 280 கோடி மோசடியும், சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்த வகையில் ரூ.11, 600 கோடியும் வைரவியாபாரி நீரவ் மோடி மோசடி செய்துவிட்டார் என்று, பஞ்சாப் நேஷனல் வங்கி அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில், நீரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

இதனை தொடர்ந்து, நடிகை பிரியங்கா சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில்,நான் அவருடைய நிறுவனத்திற்கு பல விளம்பரங்கள் நடித்து கொடுத்து உள்ளேன்.ஆனால் அதற்கான முறையான ஊதியம் இன்றளவும் தரவில்லை என கூறி அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரை தொடர்ந்து, நடிகர் சித்தார்த் மல்கோத்ராவும் அவர் மீது வழக்கு தொடர உள்ளார்.