பவன் கல்யாணின் ஹிந்தி மொழி குறித்த கருத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ், தன்னுடைய எக்ஸ் தள பதிவு மூலம் தரமாஅன் பதிலடி கொடுத்துள்ளார்.

Prakash Raj Reply To Pawan Kalyan : ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் ஹிந்தி மொழி குறித்த சமீபத்திய கருத்துகளுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பவன் கல்யாணை சாடியும், மற்றவர்கள் மீது "ஹிந்தியை திணிக்க" முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டி அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பிரகாஷ் ராஜ் பதிலடி

பிரகாஷ் ராஜ் போட்ட பதிவில், "உங்கள் ஹிந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள். இது இன்னொரு மொழியை வெறுப்பதல்ல; நமது தாய்மொழியையும், நமது கலாச்சார அடையாளத்தையும் சுயமரியாதையுடன் பாதுகாப்பதாகும். தயவு செய்து இதை பவன் கல்யாண் அவர்களுக்கு யாராவது விளக்குங்கள்." என்று எழுதினார்.

Scroll to load tweet…


பவன் கல்யாண் காக்கிநாடாவின் பித்தாபுரத்தில் நடந்த ஜனா சேனா கட்சியின் 12வது தொடக்க நாள் விழாவில் சமீபத்தில் ஆற்றிய உரையில், தமிழ்நாட்டில் ஹிந்தி திணிப்பு குறித்து அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலடியாக பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

பவன் கல்யாண் பேசியது என்ன?

இந்த தலைவர்கள் ஹிந்தியை எதிர்த்தாலும், தமிழ் திரைப்படங்களை ஹிந்தியில் மொழிமாற்றம் செய்து நிதி ஆதாயம் பெற அனுமதிக்கிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார். சமஸ்கிருதத்தை சிலர் ஏன் விமர்சிக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஏன் ஹிந்தியை எதிர்க்கிறார்கள், அதே நேரத்தில் தங்கள் திரைப்படங்களை ஹிந்தியில் மொழிமாற்றம் செய்து நிதி ஆதாயம் பெற அனுமதிக்கிறார்கள்?

அவர்களுக்கு பாலிவுட்டில் இருந்து பணம் வேண்டும், ஆனால் ஹிந்தியை ஏற்க மறுக்கிறார்கள் - இது என்ன மாதிரியான நியாயம்?" என்று காக்கிநாடாவில் உள்ள பித்தாபுரத்தில் கட்சியின் 12வது தொடக்க நாள் விழாவில் பவன் கல்யாண் கேட்டார். மத்திய அரசு 'ஹிந்தி திணிப்பு' செய்வதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியதற்கும், NEPயில் கூறப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கையை எதிர்த்து அமல்படுத்த மறுத்ததற்கும் மத்தியில் பவன் கல்யாணின் கருத்துக்கள் வந்துள்ளன. 

இதையும் படியுங்கள்... இந்தி குறித்த பவன் கல்யாணின் பேச்சு... ஆதாரத்தோடு நோஸ்கட் தந்த கனிமொழி!