'பொன்னியின் செல்வன்' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியானது..!
'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த தகவல் மற்றும் ரன்னிங் டைம் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படம், தமிழர்களின் பாரம்பரிய வரலாற்று சுவடுகளை வைத்து, உருவாக்கப்பட்ட நாவலான, கல்கியின் 'பொன்னியின் செல்வன்' கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதால், இந்த படத்தை எதிர்நோக்கி கார்த்திருக்கின்றனர் ரசிகர்கள். எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் போன்றவர்கள் எடுக்க முற்பட்ட இந்த கதையை, அவர்களால் எடுக்க முடியாமல் போன நிலையில், இந்த படத்தை இயக்குவதை தன்னுடைய வாழ் நாள் கனவாக நினைத்து தற்போது இரண்டு பாகங்களாக எடுத்து முடித்துள்ளார் இயக்குனர் மணிரத்னம்.
மேலும் செய்திகள்: அழகில் அம்மா கௌதமியை மிஞ்சிய மகள் சுப்புலட்சுமி..! ஹீரோயின் லுங்கியில் ரசிகர்களை கவர்ந்த லேட்டஸ்ட் போட்டோஸ்!
இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில், லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். உலக நாடுகள் முழுவதும் இந்த படம் மிகப்பிரமாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் புரமோஷன் பணிகளிலும் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்த படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகள், ஹைதராபாத், கேரளா போன்ற இடங்களுக்கு சென்று படத்தை புரோமோட் செய்து வருகிறார்கள். அவ்வப்போது இது குறித்த புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வருகிறது.
மேலும் செய்திகள்: 'நானே வருவேன்' என்னுடைய கதை அல்ல..! அப்போ யாருடையது? ஆச்சர்ய தகவலை வெளியிட்ட செல்வராகவன்!
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், வெளியாக உள்ள இந்த படத்தில் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த படம் 2 மணி நேரம் 47 நிமிடங்கள் ஓடும் என இதன் ரன்னிங் டைமும் வெளியாகியுள்ளது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்துள்ள இந்த படத்தில், மிக முக்கிய கதாபாத்திரங்களை விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், உள்பட பலர் ஏற்று நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.