உறுதி! உறுதி!.. வெளியானது ‘பொன்னியின் செல்வன்’ முக்கிய அப்டேட்... பட்டையைக் கிளப்பும் டைட்டில் லுக் போஸ்டர்!
பாகுபலி, KGF , படங்களை போன்று பொன்னியின் செல்வன் படமும் இரண்டு பாகங்களாக வெளியாகும் என தகவல் வெளியான நிலையில், தாற்போது அந்த தகவலை உறுதி செய்து டைட்டிலே லுக் போஸ்டரை படக்குழு அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது.
பாகுபலி, KGF , படங்களை போன்று பொன்னியின் செல்வன் படமும் இரண்டு பாகங்களாக வெளியாகும் என தகவல் வெளியான நிலையில், தாற்போது அந்த தகவலை உறுதி செய்து டைட்டிலே லுக் போஸ்டரை படக்குழு அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது.
கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” வரலாற்று நாவலை படமாக எடுக்க வேண்டும் என்ற மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவு கொஞ்சம், கொஞ்சமாக உருவம் பெற ஆரம்பித்து, தாற்போது விறுவிறுப்பாக அதற்கான படப்பிடிப்பும் நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், பிரபு, சரத்குமார் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. அவ்வப்போது இந்த படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களும் வெளியாகி வருகிறது.
முதல் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது. அங்குள்ள அடந்த வனப்பகுதியில் பிரம்மாண்ட அரண்மனை போல் செட் அமைத்து ஷூட்டிங் நடத்தினர் படக்குழுவினர். பின்னர்கொடூர கொரோனா மணிரத்னத்தின் கனவில் மண்ணை வாரிப்போட்டது என்று தான் சொல்ல வேண்டும், விறுவிறுப்பாக நடந்த படப்பிடிப்புகள் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது.
கொரோனா பிரச்சனை கட்டுக்குள் வந்த பின்னர் ஹைதராபாத்தில் படப்பிடிப்பை நடத்திய படக்குழு, தாற்போது இறுதி கட்ட படப்பிடிப்பை, புதுவையில் நடத்தி வருகிறார்கள். இந்த படத்தை சுமார் 500 கோடி பட்ஜெட்டில் மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.
விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படக்குழு 'பொன்னியின் செல்வன்' படத்தை பாகுபலி, KGF படங்களை போன்று இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளதாக தகவல் வெளியானது. தாற்போது இந்த தகவலை உறுதி செய்வது போல் படக்குழுவினர், பொன்னியின் செல்வன் 1 என குறிப்பிடப்பட்ட டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது, மட்டும் இன்று அடுத்த ஆண்டு படம் வெளியாகும் என்பதும் தெரியவந்துள்ளது.