பஞ்சாப் விவகாரம்..சித்தார்த்தின் ஆபாச விமர்சனம்.. கடுப்பான சாய்னா நேவாலின் கணவர்..
பேட்மிண்டன் வீரர் பாருபள்ளி காஷ்யப் திங்களன்று தனது ட்விட்டரில் நடிகர் சித்தார்த் தனது மனைவி சாய்னா நேவால் குறித்து சித்தார்த் தெரிவித்த மோசமானகருத்துக்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டைக் குறிப்பிட்டு, ஜனவரி 5 அன்று சாய்னா நேவால் ஒரு ட்வீட்டில் எழுதினார்: "தனது சொந்தப் பிரதமரின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டால் எந்த நாடும் பாதுகாப்பாக இருப்பதாகக் கூற முடியாது. நான் கடுமையான வார்த்தைகளில் கண்டிக்கிறேன். பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல்.
சாய்னா நேவாலின் ட்வீட்டிற்கு பதிலளித்து, ஜனவரி 6 அன்று ட்விட்டரில் சித்தார்த்: "உலகின் நுட்பமான சேவல் சாம்பியன்... கடவுளுக்கு நன்றி எங்களிடம் இந்தியாவின் பாதுகாவலர்கள் உள்ளனர். வெட்கப்படுகிறேன் என எழுதியிருந்தார்."
இந்த ட்வீட்டிருக்கு பிரபலங்கள் பலரும் விமர்சித்து வாருகின்றனர். அதோடு மகளிர் ஆணையமும் சித்தர் மீது புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று சித்தார்த்தை டேக் செய்த பாருபள்ளி காஷ்யப் : "இது எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது, உங்கள் கருத்தை வெளிப்படுத்துங்கள், ஆனால் சிறந்த வார்த்தைகளைத் தேர்ந்தெடுங்கள். இப்படிச் சொல்வது அருமையாக இருந்தது என்று நீங்கள் நினைத்தீர்களா?.. என பதிவிட்டுள்ளார்.