கமல்ஹாசன் தோல்வி... பார்த்திபன் போட்ட பரபரப்பு ட்விட்!
இந்நிலையில் கமலின் தோல்வி குறித்து, பிரபல இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பு ட்விட் ஒன்றை போட்டுள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவேன் என்று அறிவித்த நாள் முதலே பரபரப்பு பரபரப்பு பற்றி கொண்டது. அதே... தொகுதியில் காங்கிரஸ்-பாஜக-மக்கள் நீதி மய்யம் என்று மும்முனை போட்டி ஏற்பட்டது. என்றாலும் பாஜக வேட்பாளர் வானதிக்கும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.
காலையில் ஆரம்ப சுற்றுகளில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரும், கமல்ஹாசனும் மாறி மாறி முன்னிலை வகித்தனர். ஒரு கட்டத்தில் மயூரா ஜெயக்குமார் பின்தங்க, வானதிக்கும் கமலுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. மாலை வரை கமல்ஹாசனே தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். எப்படியும் இந்தத் தொகுதியில் கமல் வெற்றி பெறுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி சுற்றுகளில் வானதி சீனிவாசன் திடீரென முன்னிலைப் பெறத் தொடங்கினார்.
கடைசி சுற்றுகளில் வானதி சீனிவாசன் தொடர்ந்து முன்னிலை பெற, இறுதியில் 1700 வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசன் தோல்வியடைந்தார். மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் மட்டும் வெற்றி பெறுவார் என்று, மக்கள் நீதி மையம் கட்சியை சேர்த்தவர்கள் அனைவரும் எதிர்பார்த்த நிலையில் 1700 வாக்கு வித்தியாசத்தில் அந்த வாய்ப்பும் பறிபோனது.
இந்நிலையில் கமலின் தோல்வி குறித்து, பிரபல இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பு ட்விட் ஒன்றை போட்டுள்ளார். அதில் "திரு கமல் அவர்களின் வெற்றி என்பது.... வெற்றி தோல்வி-எண்ணிக்கையில் இல்லாமல், தன்னம்பிக்கையில் மக்களுக்காக உழைக்க முன்வந்து, அரசியல் க(ள்)ளம் அறிந்தப் பின்(னும்) வாங்காமல், வெல்வதற்கு கூட்டு பொரியல் ஏதும் வைக்காமல் பேராண்மையுடன் நின்றதே.... என பதிவு செய்துள்ளார்.