வாய்ப்பளித்த குருவிற்கு பாதபூஜை...!!! நன்றியை நிவர்த்தி செய்தார் பாடல் மன்னன் எஸ்.பி.பி ....!!!
திரையுலகில் தனது 50 ஆண்டு சாதனை முன்னிட்டு பாடகர் ஜேசுதாஸ் - கு , பாத பூஜை செய்தார் எஸ்.பி.பி.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் கன்னடம் , மலையாளம் , ஹிந்தி, ஆங்கிலம் , உருது உள்ளிட்ட பல மொழிகளில் இதுவரை 50 ஆயிரத்திற்கும் அதிகமான பாடலை பாடி , புகழின் உச்சிக்கு சென்றவர் எஸ்பிபி
தற்போது இவர், தன்னுடைய 50 ஆண்டு காலமாக திரையுலகில் , கொடி கட்டி பறக்க காரணமாக இருந்த , பாடகர் யேசுதாஸுக்கு. பாத பூஜையை செய்தார்.
1966 ஆம் ஆண்டு , டிசம்பர் 15 ஆம் தேதி, விஜயா கார்டனில் தன் முதல் பாடலை பாடினார் . தற்போது இந்த விஜயா கார்டன் தான் , ஆர்.கே வி ஸ்டுடியோவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தனது 50 ஆண்டு கால திரையுலக சாதனையை முன்னிட்டு, இந்த நிகழ்வை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
