Asianet News TamilAsianet News Tamil

ஓவியா போட்ட சின்ன “பிட்டு”...! கவுந்து போன காயத்ரி..! ஓவியா நீ அம்புட்டு நல்லவளா கண்ணு....

oviya said about gayathri
oviya said about gayathri
Author
First Published Oct 14, 2017, 12:40 PM IST


ஓவியா போட்ட சின்ன “பிட்டு”...! கவுந்து போன காயத்ரி..!

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே முதலில் மக்கள் மனதில் தோன்றுவது என்னமோ ஓவியா தான்.ஆரவ் பிக்பாஸ் வெற்றியாளராக இருந்தாலும்,ஓவியா தான் மக்கள் மனதில் இன்னும் நிலைத்து இருக்கிறார்  என்றே கூறலாம். 

அதாவது ,பிக்பாஸ் வீட்டில் தன்னை டார்ச்சர் செய்த ஜூலி, காயத்ரி, ஆரவ் ஆகியோர்கள் குறித்து வெளியே வந்தவுடன் அவர் எந்தவித எதிர்மறை கருத்துக்களையும் தெரிவிக்காதது அவர் மீதான மரியாதையை அதிகரிக்க வைத்துள்ளது.

இந்நிலையில்,பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் மனம்  திறந்து பேசியுள்ளார் ஓவியா.அதில், 
'காயத்ரி தன்னை ஒரு குழந்தை போல் பார்த்து கொண்டதாகவும், தன்மீது அதிக அக்கறை கொண்டவராக இருந்தார் என்றும் கூறியிருந்தார்

.காயத்ரி ஓவியாவை பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது எந்த அளவுகு டார்ச்சர் கொடுத்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் காயத்ரியை ஓவியா ஒரு தாய் ஸ்தானத்தில் வைத்து பார்ப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஒவ்வொரு நாளும்  ஓவியாவிற்கு மவுசு கூடிக்கொண்டே செல்கிறது என்றுதான் கூற முடியும். ஓவியாவின் இந்த கருத்தை கேட்ட காயத்ரி அப்படியே உருகிவிட்டாராம். 

Follow Us:
Download App:
  • android
  • ios