Asianet News TamilAsianet News Tamil

ரஜினி இல்ல... அம்மா, மகள் இருவருடனும் ஜோடியாக நடித்த ஒரே ஹீரோ யார் தெரியுமா?

திரைத்துறையில் பல விசித்திரங்கள் நடந்துள்ளன. அதில் தாய் மகள் இருவரும் ஒரே ஹீரோவுடன் நடித்த சம்பவம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

NTR Only Hero To Romance Both Mother And Daughter On Screen gan
Author
First Published Aug 28, 2024, 10:39 AM IST | Last Updated Aug 28, 2024, 10:39 AM IST

திரைத்துறையில் பல விசித்திரங்கள் நடந்துள்ளன. அதில் ஒரே ஹீரோயினுடன் தந்தை மகன் இருவரும் நடித்த சம்பவங்கள் ஏராளம். பாலய்யா, என்.டி.ஆர், நாகார்ஜுனா, சைதன்யா, இப்படி தந்தை மகன்கள் ஒரே ஹீரோயினுடன் நடித்த சம்பவங்கள் உண்டு. ஆனால் தாய் மகள் இருவரும் ஒரே ஹீரோவுடன் ஜோடியாக நடித்த சம்பவங்கள் இல்லை. ஆனால் தெலுங்கு சினிமா வரலாற்றில் இந்த சாதனையை ஒரே ஒரு ஹீரோ மட்டுமே படைத்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை என்.டி.ராமராவ். அப்படி யார் அந்த தாய் மகள் ஹீரோயின்கள் தெரியுமா? 

அவர்கள் வேறு யாரும் இல்லை.. ஜெயசித்ரா அவரது தாயார் அம்மாஜி. ஆமாம் ஜெயசித்ராவின் தாயார் அம்மாஜியும் ஒரு ஹீரோயின் தான். அவரை அந்த காலத்தில் ஜெயஸ்ரீ என்றும் அழைப்பார்கள். ஆனால் இவர்கள் இருவருமே அண்ணா என்று அழைக்கப்படும் நந்தமுரி தாரக ராமராவ் அவர்களுடன் ஜோடியாக நடித்துள்ளனர். இப்போதைய காலத்திலும் கூட தாய் மகள் இருவரும் ஹீரோயின்களாக உள்ளனர். ஆனால் அவர்கள் ஒரே ஹீரோவுடன் நடிக்கவில்லை. சாரிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி ஜான்வி கபூர்.. இப்படி தாய் மகள் இருவரும் ஹீரோயின்களாக இருந்த சம்பவங்கள் உண்டு. ஆனால் ஒரே ஹீரோவுடன் தாய் மகள் நடித்தது என்றால் அது ராமராவ் அவர்களுடன் மட்டுமே சாத்தியமானது. 

NTR Only Hero To Romance Both Mother And Daughter On Screen gan

அம்மாஜி என்கிற ஜெயஸ்ரீ தெலுங்கில் ரோஜுலு மாராய், தெய்வபலம் போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால் இந்த இருவருடனும் சீனியர் என்.டி.ஆர் ஜோடியாக நடித்து அரிய சாதனை படைத்துள்ளார். அம்மாஜியின் மகள் ஜெயசித்ரா, கடந்த 1976 ஆம் ஆண்டு வெளிவந்த நம் தெய்வம் என்ற படத்தின் மூலம் என்.டி.ஆர் அவர்களுடன் ஜோடியாக அறிமுகமானார். இந்த படத்தில் ராமராவ் ஒரு சிறை அதிகாரியாக நடித்திருப்பார்.. குற்றவாளிகளை நல்லவர்களாக மாற்ற முடியும் என்று ராமராவ் நம்புவார்.. அதேபோல் குற்றம் செய்தவர்களை சிறைக்கு அழைத்து வந்து அவர்களை நல்லவர்களாக மாற்றி அவர்கள் வாழ்க்கையில் ஒளியை ஏற்றுவார்.

அதற்கு முன்னதாக 1959 ஆம் ஆண்டு தெய்வபலம் என்ற திரைப்படம் வெளிவந்தது. இந்த படத்தில் ஜெயசித்ராவின் தாயார் ஜெயஸ்ரீ என்கிற அம்மாஜி என்.டி.ஆர் அவர்களுடன் நடித்திருப்பார். பொன்னலூரு வசந்தகுமார் ரெட்டி தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. என்.டி.ஆர் திரை வாழ்க்கையில் ஒரு அரிய சாதனையாகவும் இது அமைந்தது. அதன் பிறகு இப்படி ஒரு சம்பவம் திரைத்துறையில் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios