Asianet News TamilAsianet News Tamil

தொடரும் தற்கொலைகள்....லட்சுமி ராமகிருஷ்ணனை வெளுத்து வாங்கிய நிர்மலா பெரியசாமி....!!!

nirmalaperiyasamy and-lakshmi-ramakrishnan-issue
Author
First Published Dec 30, 2016, 4:51 PM IST


செய்தி வாசிப்பாளர், நிர்மலா பெரியசாமியை யாராலும் மறக்க முடியாது அந்த அளவிற்கு அனைவர் மனதிலும் ஆழமாய் தனது குரல் திறமையை பதிய வைத்தவர்.  

இவர் தான் கடந்த சில மாதங்களாக சர்ச்சையை கிளப்பி  வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை பிள்ளையார் சுழி போட்டு துவங்கி வைத்தவர்.

இவர் தொகுத்து வழங்கிய சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி, நல்ல நிலையில் போகிக்கொண்டு இருக்கும் போதே ..... நிகழ்ச்சியின் இயக்குனருக்கும் இவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாட்டால் நிகழ்ச்சியை விட்டு ஒதிங்கினார்.

இந்நிலையில் பெருமையுடன் தான் தொடங்கி வைத்த நிகழ்ச்சியை தற்போது பாழாக்கிவிட்டார் லட்சுமி ராமகிருஷ்ணன் என கூறியுள்ளார் நிர்மலா பெரியசாமி.

மேலும் இவர்  நடத்த தொடங்கிய பிறகு எத்தனை பேர் தற்கொலை செய்து இறந்தார்கள் தெரியுமா என்று கொந்தளித்துள்ளார், இப்படி ஒரு சம்பவத்தை கேரளாவில் செய்தால் சும்மாவிடுவர்களா? தமிழன் என்பதால் தான் பல வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் தொடர்ந்து செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சொல்வதெல்லாம் உண்மை, நிஜங்கள் என தலைப்பிலிருக்கும் உண்மை நிகழ்ச்சியில் இல்லை எனவும் என லட்சுமி ராமகிருஷ்னனையும், குஷ்பூவையும் வெளுத்து வாங்கியுள்ளார்.

ஏற்கனவே ஸ்ரீபிரியா, ரஞ்சனி  போன்ற மூத்த நடிகைகள் புகார் தெரிவித்துவந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் முன்னாள் தொகுப்பாளர் நிர்மலா பெரியசாமி  இப்படியொரு புகாரை தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios