New technologies to shake up all of you - 2

உலகின் இதுவரை வந்த படங்களில் அதிகம் வசூல் செய்தது ‘அவதார்’ படம்தான். இப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கியிருந்தார். ரூ.15 ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூல் செய்த இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது பிஸியாகவுள்ளார் கேம்ரூன்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

‘அவதார்’ இரண்டாம் பாகத்தில் பல புதுமைகளை புகுத்த ஜேம்ஸ் கேமரூன் இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறாராம்.

இரண்டாம் பாகத்தில் புது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எல்லோரையும் அதிர வைக்க காத்திருக்கிறார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்.

அது என்னவெனில், 3-டி கண்ணாடி அணியாமலேயே படத்தை 3-டியில் பார்க்கும் ஒரு சிறப்பு டெக்னாலஜியை இந்த படத்தில் இவர் அறிமுகப்படுத்தவுள்ளேன் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

விரைவில் நம் அனைவரையும் அடுத்த பரிணாமத்திற்கு கொண்டுபோகும் அவதார் – 2-ஐ எதிர்ப்பார்த்து உலக சினிமா ரசிகர் ஆவலோடு காத்திருக்கின்றனர்.