Enna Solla Pogirai review : 40 கதையைப் போல் இதுக்கும் தூங்கிருக்கலாம் - அஸ்வின் படத்தை வச்சு செய்யும் Netizens
ஹரிகரன் இயக்கத்தில் அஸ்வின் குமார் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் என்ன சொல்ல போகிறாய் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்கிற சமையல் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அஸ்வின் குமார். இந்நிகழ்ச்சி மூலம் புகழ் வெளிச்சத்தை பெற்ற அஸ்வினுக்கு ஏராளமான ரசிகர்களும் கிடைத்தனர். சமூக வலைதளங்களில் முன்னணி நடிகர், நடிகைகளுக்கு இணையாக இவருக்கும் பாலோவர்கள் கிடைத்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் அஸ்வினுக்கு பட வாய்ப்பும் கிடைத்தது. அதன்படி ‘என்ன சொல்ல போகிறாய்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார் அஸ்வின். சமூக வலைதளங்களில் அன்பையும், ஆதரவையும் பெற்று வந்த அஸ்வின், கடந்த மாதம் நடந்த என்ன சொல்ல போகிறாய் (Enna Solla Pogirai) படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சால் கடும் எதிர்ப்பை சம்பாதித்தார்.
கதை கேட்கும் போது கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கி விடுவேன் என்றும் அவ்வாறு இதுவரை 40 கதைகளை கேட்டு தூங்கி இருக்கிறேன் என அவர் பேசியதைக் கேட்டு கோலிவுட்டே கொந்தளித்தது. ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை அதற்குள் இப்படி ஒரு ஆணவப் பேச்சு தேவையா என்றெல்லாம் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. நெட்டிசன்களும் மீம் போட்டு கலாய்த்தனர்.
இப்படத்தை கடந்த மாதம், கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் அஸ்வினின் பேச்சுக்கு வந்த எதிர்ப்பின் காரணமாக என்ன சொல்ல போகிறாய் படத்தின் ரிலீஸை தள்ளிவைத்தனர். தற்போது பொங்கல் ரேஸில் இருந்து அஜித்தின் வலிமை படம் விலகியதால், அஸ்வினின் என்ன சொல்ல போகிறாய் படத்தை இன்று ரிலீஸ் செய்துள்ளனர்.
ஹரிகரன் இயக்கியுள்ள இந்த படத்தில் அஸ்வினுக்கு ஜோடியாக தேஜு அஸ்வினி, அவந்திகா மிஷ்ரா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் புகழ் காமெடி வேடத்தில் நடித்துள்ளார். விவேக் மெர்வின் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரிச்சர்டு எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஏராளமானோர் அஸ்வின் கதை கேட்டு தூங்கியதை போல் தாங்களும் படத்தை பார்த்து தூங்கிவிட்டதாக தெரிவித்துள்ளனர். சிலரோ 40 கதை கேட்டு தூங்கியதைப் போல் இந்தகதை கேட்டும் அஸ்வின் தூங்கி இருக்கலாம் என கிண்டலடித்து வருகின்றனர். படம் பார்த்த ரசிகர்கள் போட்ட டுவிட்டுகள் பின்வருமாறு: