Asianet News TamilAsianet News Tamil

நடிகர் ராதாரவிக்கு சமர்ப்பணம் செய்யவேண்டிய நயன்தாரா குறித்த ஒரு முக்கிய செய்தி...

இந்திய சினிமாவில் இதுவரை யாருக்கும் கிட்டாத அதிர்ஷ்டமாக இரண்டாவது முறையாக சீதா தேவியாக நடிக்கவிருக்கிறார் நயன்தாரா. இதற்கு முன்னர் ‘ஸ்ரீராமராஜ்யம்’படத்தில் சீதாவாக நடித்து ரசிகர்களை பக்திப்பரவசத்துக்கு ஆளாக்கியிருந்தார் அவர்.

nayanthara to act as seetha again
Author
Chennai, First Published Jul 10, 2019, 11:17 AM IST

இந்திய சினிமாவில் இதுவரை யாருக்கும் கிட்டாத அதிர்ஷ்டமாக இரண்டாவது முறையாக சீதா தேவியாக நடிக்கவிருக்கிறார் நயன்தாரா. இதற்கு முன்னர் ‘ஸ்ரீராமராஜ்யம்’படத்தில் சீதாவாக நடித்து ரசிகர்களை பக்திப்பரவசத்துக்கு ஆளாக்கியிருந்தார் அவர்.nayanthara to act as seetha again

ராமாயண காவியத்தை ஏற்கனவே பலர் படமாக்கி உள்ளனர். தற்போது இன்னொரு ராமாயண படத்தை ‘3டி’யில் எடுக்கின்றனர்.இந்த படத்தை இந்தியில் ’டங்கல்’ படத்தை இயக்கி பிரபலமான நிதிஷ் திவாரி, ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ படத்தை இயக்கிய ரவி உத்யவார் ஆகியோர் இணைந்து டைரக்டு செய்கிறார்கள். பிரபல தெலுங்கு பட அதிபர் அல்லு அரவிந்த் தயாரிக்கிறார்.

ரூ.1,500 கோடி செலவில் மூன்று பாகங்களாக இப்படம்  தயாராகிறது. ஒவ்வொரு பாகத்துக்கும் தலா ரூ.500 கோடி செலவிடுகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி மொழிகளை சேர்ந்த பிரபல நடிகர்-நடிகைகள் நடிக்க உள்ளனர். சீதை வேடத்தில் நடிக்க, பல இந்தி நடிகைகளைப் பர்சீலித்த தயாரிப்பாளர்கள் இறுதியில் ‘ஸ்ரீராமராஜ்ஜியத்தில் நடித்த நயனை விட பொறுத்தமாக யாரும் இருக்கமாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது. இதை ஒட்டி  நயன்தாராவிடம் பேச படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.nayanthara to act as seetha again

ராமாயணத்தை படமாக்குவது குறித்து டைரக்டர்கள் நிதிஷ் திவாரி, ரவி உத்யவார் ஆகியோர் கூறும்போது,“ராமாயணம் மிக சிறந்த காவியம் மட்டுமின்றி நமது கலாசாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் இந்த படத்தை மிகவும் பொறுப்போடு எடுக்கும் அவசியம் இருக்கிறது. பண விஷயத்தில் சமரசம் வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் சுதந்திரம் கொடுத்துள்ளனர். எனவே இந்த படத்தை கண்கொள்ளா காட்சியாக திரையில் காட்ட இருக்கி றோம்.”என்று பக்தி மணம் கமழ உத்தரவாதம் தருகிறார்கள்.இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்குகிறது. முதல் பாகம் 2021-ல் வெளியாகிறது. 

‘கொலையுதிர்காலம்’பட ஆடியோ விழாவில் இப்போதெல்லாம் யார்யார்தான் சீதா தேவி வேடத்தில் நடிப்பது என்ற விவஸ்தையில்லாமல் போய்விட்டது என்று நயன்தாராவை நேரடியாகப் பேசிய நடிகர் ராதாரவிக்கு இச்செய்தியை சமர்ப்பணம் செய்கிறோம்.

 
 

Follow Us:
Download App:
  • android
  • ios