Asianet News TamilAsianet News Tamil

Nayanthara : நள்ளிரவில் காதலனுடன் திருப்பதிக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா... என்ன விஷயம் தெரியுமா?

Nayanthara : இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் நள்ளிரவில் ஜோடியாக திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். 

Nayanthara surprise visit to tirupati with Vignesh shivan for Kaathuvaakula Rendu kaadhal movie success
Author
Tamil Nadu, First Published Apr 28, 2022, 11:42 AM IST

தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் வயப்பட்டார். அப்படத்தைப் போல் அவர்களது காதலும் சக்சஸ் ஆனது. 7 ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்கள் இருவரும் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் என்கிற படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளனர்.

இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், சமந்தாவும் நடித்துள்ளனர். முக்கோண காதல் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் 2 ஆண்டுகளுக்கு பின் எடுத்து முடிக்கப்பட்டு தற்போது ரிலீசாகி உள்ளது.

நடிகை சமந்தாவின் பிறந்தநாளான இன்று காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை வெளியிட்டுள்ளனர். நடிகர் விஜய் சேதுபதி நடித்த படங்களில் இப்படத்திற்கு தான் முதன்முறையாக அதிகாலை 4 மணி காட்சிகள் திரையிடப்பட்டன. இதனால் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் நடிகர் விஜய் சேதுபதியின் கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடினர்.

Nayanthara surprise visit to tirupati with Vignesh shivan for Kaathuvaakula Rendu kaadhal movie success

இது ஒருபுறம் இருக்க, இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் ஜோடியாக திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். காத்துவாக்குல படம் வெற்றிபெற வேண்டி அவர்கள் திருப்பதிக்கு சென்றுள்ளனர். மேலும் நடிகை நயன்தாராவுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை அதிகாலை 2:22 மணிக்கு பதிவிட்டு காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை புரமோட் செய்துள்ளார் விக்னேஷ் சிவன்.

இதையும் படியுங்கள்... Thalapathy 66 : தளபதி 66 படத்துக்காக விஜய் எடுக்க உள்ள மிகப்பெரிய ரிஸ்க்.... ஏற்றுக்கொள்வார்களா ரசிகர்கள்?

Follow Us:
Download App:
  • android
  • ios