நயன்தாராவுக்கு மட்டும் கதையம்சம் கொண்ட படங்கள் அமைவது எப்படி! – ஆச்சரியத்தில் ஜோதிகா...
நடிகை நயன்தாராவுக்கு மட்டும் எப்படி கதையம்சம் சார்ந்த படங்கள் அமைகிறது! என்று ஆச்சரியப்பட்டார் நடிகை ஜோதிகா.
நீண்ட நாட்களுக்குப் பின்னர் ’36 வயதினிலே’ படத்தில் நடித்த ஜோதிகா தற்போது ‘மகளிர் மட்டும்’ படத்தில் நடித்துள்ளார். ’36 வயதினிலே" படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் மீண்டும் அவர் மகளிர் மட்டும் படத்தில் நடித்தார்.
பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘மகளிர் மட்டும்’. இப்படம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்தப் படத்தில், சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் ‘நாச்சியார்’ படத்தில் நடித்துள்ள ஜோதிகா, அடுத்ததாக மணிரத்னம் படத்தில் நடிக்க இருக்கிறாராம்.
இந்த நிலையில் நயன்தாரா குறித்து ஜோதிகா கூறியது:
''கதை அமையும் விஷயத்தில் நயன்தாரா ஆசீர்வதிக்கப்பட்டவர் என நினைக்கிறேன். அவருக்கு ஏற்ற மாதிரியான கதையம்சம் கொண்ட படங்கள் எளிதில் அவருக்கு கிடைத்து விடுகிறது. அவருக்கு மட்டும் எப்படி அப்படி கதையம்சம் கொண்ட படங்கள் அமைகிறது! என்று ஆச்சரியமாக கேட்டார் ஜோதிகா.