சாக்லேட், கேரமில், லட்டுவை நினைத்து அழுத நமிதா...
பிக் பாஸ் நிகழ்ச்சியில், நேற்று ஒவ்வொரு போட்டியாளர்களும் தனித்தனியாக பிக் பாஸ் அறைக்கு வரவழைக்கப்பட்டு நீங்கள் இந்த நிகழ்ச்சியின் அனுபவம் குறித்தும், யாரை மிஸ் பண்ணுகிறீர்கள் என கேட்கப்பட்டது.
இதில் பேசிய நமிதா... இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளது தனக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும், ஓவியாவை குறிப்பிட்டு சில அழுக்கு மனம் நிறைந்தவர்கள் இங்கு இருக்கின்றனர். அவர்களை தனக்கு பிடிக்காது என கூறினார்.
மேலும் நான்... என்னுடைய நண்பர்களை மிகவும் மிஸ் பண்ணுவதாக கூறினார், அதே போல தன்னுடைய செல்ல நாய்கள் சாக்லேட், கேரமில், மற்றும் லட்டுவை மிகவும் மிஸ் பண்ணுவதாக கூறி அழுதார்.