Naga Chaitanya : விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தா கொண்டாடிய முதல் பிறந்தநாள் என்பதால், எதிர்பார்த்தபடி அவருக்கு நாக சைதன்யா எந்தவித வாழ்த்தும் தெரிவிக்கவில்லை.
நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 4 ஆண்டுகள் மட்டுமே நீடித்த இவர்களது திருமண உறவு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிவுக்கு வந்தது. இருவருக்குமிடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக அறிவித்தனர்.
விவாகரத்துக்கு அறிவிப்புக்கு பின்னர் இருவரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர். நடிகை சமந்தா கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என ஏராளமான மொழிகளில் நடித்து வருகிறார். அதேபோல் நடிகர் நாக சைதன்யாவும் பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை சமந்தா நேற்று தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடினார். விவாகரத்துக்கு பின் அவர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால், எதிர்பார்த்தபடி அவருக்கு நாக சைதன்யா எந்தவித வாழ்த்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் நாக சைதன்யா, தான் நடிக்கும் வெப் தொடர் மற்றும் படத்தின் அப்டேட்டை நேற்று வெளியிட்டுள்ளார்.
அவர் நடிக்கும் தூதா என்கிற வெப் தொடர் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த தொடரை விக்ரம் குமார் இயக்குகிறார். திகில் கதையம்சம் கொண்ட இந்த வெப் தொடரில் நாக சைதன்யாவுடன் பிரபல மலையாள நடிகை பார்வதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அதேபோல் அவர் நடிக்கும் பாலிவுட் படமான லால் சிங் சட்டா படத்தில் இருந்து 2-வது பாடலும் நேற்று தான் வெளியிடப்பட்டது. அமீர்கான் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவரது நண்பனாக நாக சைதன்யா நடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 11-ந் தேதி ரிலீசாக உள்ளது.
இதையும் படியுங்கள்... அஜித் பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் டிரீட்... ரெண்டுமே வேறலெவல் அப்டேட் மிஸ் பண்ணீடாதிங்க
