மீண்டும் நடிக்க தயாராகும் நதியா! அசப்புல ஹீரோயின் மாதிரியே இருக்காங்களே..!
'பூவே பூச்சூடவா' படத்தில் அறிமுகமானத்தில் இருந்து இப்போது வரை வாடாத மலர் போல, அழகில் மின்னிக் கொண்டிருக்கிறார் நடிகை நதியா. 80 களில் ரஜினிகாந்த், விஜயகாந்த், போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர், பின்னர் 1988ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு ஒதுங்கினார்.
'பூவே பூச்சூடவா' படத்தில் அறிமுகமானத்தில் இருந்து இப்போது வரை வாடாத மலர் போல, அழகில் மின்னிக் கொண்டிருக்கிறார் நடிகை நதியா. 80 களில் ரஜினிகாந்த், விஜயகாந்த், போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர், பின்னர் 1988ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு ஒதுங்கினார்.
இரண்டு மகள்களுக்கு தாயான பின்னர், அவ்வபோது ஒரு சில படங்களில் தலைகாட்டி வந்தார். அந்த வகையில் இவர் ரீஎன்ட்ரீ கொடுத்தார் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி மற்றும் தாமிரபரணி ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, சமீபகாலமாக ஒரு சில சீரியல்களிலும் விளம்பரப் படங்களிலும் தலை காட்டி வந்தார் நதியா.
தற்போது மீண்டும் வெள்ளித்திரைக்கு அதிரடியாக நுழைந்துள்ளார். அந்தவகையில் திரிஷ்யம் 2 படத்தில் இவர் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், படப்பிடிப்பில் கலந்து கொண்டு மேக்அப் போடும் வீடியோ வைரலாகி வருகிறது. 'திரிஷ்யம் 2 ' படத்தில் கீதா பிரபாகர் நடித்த காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் தான் நதியா நடிக்கவுள்ளார். படபிடிப்பில் கலந்துகொண்ட நதியா கேரவனில் மேக்கப் போடும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது... இப்போதும் அழகில் ஹீரோயின் போலவே இருக்காங்க நதியா.