Asianet News TamilAsianet News Tamil

ரஜினியின் இரண்டாவது மருமகன் விசாகனைப் பற்றி ஒரு இயக்குநரின் பகிரங்க பயங்கர கடிதம்...

முதலில் நான் சம்மதிக்கவில்லை. பிறகு என் மேனேஜர் என்னை கன்வின்ஸ் செய்து அவர்கள் கொடுத்த 5 லட்சம் ரூபாய் அட்வான்சை பெற்றுக் கொண்டேன். ஆனால் ஒரே வாரத்தில் நான் அந்த 5 லட்சம் அட்வான்சை ராகுலனிடம் திருப்பி கொடுத்துவிட்டு எனக்கு இந்த படம் வேண்டாம் என்று கூறினேன். 

moodar koodam naveen' letter to media
Author
Chennai, First Published Apr 29, 2019, 2:59 PM IST

ஓரிரு தினங்களாக ரஜினியின் மருமகன் விசாகனை வைத்துப் படம் இயக்கித் தருவதாகச் சொல்லிவிட்டு பின்னர் ஏமாற்றியதாக ஊடகங்களில் தொடர்ந்து செய்தி வெளியாகிக் கொண்டிருக்க, அது குறித்து மிக நீண்ட விளக்கக் கடிதம் எழுதியிருக்கிறார் மூடர் கூடம் இயக்குநர் நவீன்.moodar koodam naveen' letter to media

ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.
’மூடர் கூடம்’ திரைப்படத்திற்கு பிறகு நான் தயாரித்து இயக்கி நடித்துள்ள ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ திரைப்படம் வெளியிட தயாராக இருக்கும் நிலையில், Flash Films நிறுவனத்தின் சுவர்ணா சேதுராமன் என்பவர் எனது படத்தின் ரிலீசுக்கு நீதிமன்றத்தில் தடை வாங்கியுள்ளார். அலாவுதீனின் அற்புத கேமரா படத்திற்காக அவர் 44.5 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் நான் அதை திருப்பி தரவில்லை என்றும் பொய்வழக்கு தொடுத்துள்ளார். உண்மையில் Flash Films நிறுவனத்திற்கும் இந்த திரைப்படத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. 

2016ல் Flash Films சார்பில் திரு.ராகுலன், என்னுடைய மேனேஜர் திரு வாசுதேவன் ராமமூர்த்தியை அழைத்து நவீன் எங்களுக்கு ஒரு படம் செய்து தருவாரா என்று கேட்டார். அபெக்ஸ் ஃபார்மசிட்டிகள்ஸ் நிறுவனத்தின் வாரீசான விசாகனை ஹீரோவாக வைத்து படம் எடுக்க வேண்டும். விசாகன் அமேரிக்காவில் நடிப்பு பயிற்சி பெற்று வந்துள்ளார் என்று கூறினார். முதலில் நான் சம்மதிக்கவில்லை. பிறகு என் மேனேஜர் என்னை கன்வின்ஸ் செய்து அவர்கள் கொடுத்த 5 லட்சம் ரூபாய் அட்வான்சை பெற்றுக் கொண்டேன். ஆனால் ஒரே வாரத்தில் நான் அந்த 5 லட்சம் அட்வான்சை ராகுலனிடம் திருப்பி கொடுத்துவிட்டு எனக்கு இந்த படம் வேண்டாம் என்று கூறினேன். moodar koodam naveen' letter to media

ராகுலன் என்னிடம், நீங்கள் இந்த படத்தை செய்தே ஆக வேண்டும், உங்களுக்கு எல்லா விதமான சுதந்திரமும் இங்கு கிடைக்கும், உங்கள் கிரியேட்டிவ் எல்லைக்குள் யாரும் நுழைய மாட்டார்கள் என்று சொல்லி என்னை கன்வின்ஸ் செய்தார். மேலும் ஒரு First Copy Agreement தயார் செய்து கையெழுத்திடப்பட்டது. இந்த ஃபர்ஸ்ட் காப்பி ஒப்பந்தம், Flash Films நிறுவனத்திற்கும் என்னுடைய White Shadows Productions நிறுவனத்திற்கும் இடையில் போடப்பட்டது. விசாகன் அவர்களுடைய தாய்மாமா திரு சுவர்ணா சேதுராமன் அவர்களுடையது இந்த Flash Films நிறுவனம். இந்த நிறுவனம் விசாகனை ஹீரோவாக வைத்து ஏற்கனவே இரண்டு படங்களை ஆரம்பித்து பல லட்சங்கள் செலவு செய்து பின்னர் ட்ராப் செய்திருந்த செய்தியை அவர்களே என்னிடம் சொல்லியிருந்தார்கள்.

ஆகஸ்ட் 23-2016 அன்று First Copy Agreement கையெழுத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி என்னுடைய White Shadows Productions நிறுவனத்தின் சார்பாக நான் அவர்களுக்கு ஒரு படம் first copy முறையில் தயாரித்து இயக்கி தர வேண்டும். கதை, திரைகதை, வசனம், இயக்கம், இசை, படத்தின் நீளம் போன்ற கிரியேட்டிவ் முடிவுகளை இயக்குனர் நவீன் மட்டுமே எடுக்க முடியும் என்பது அந்த ஒப்பந்தத்தின் முக்கிய பகுதி. ஒப்பந்தத்தின்படி நான் எட்டு மாதங்களுக்குள் ஸ்கிரிப்ட் எழுதி படம் எடுத்து முடித்து first copy தர வேண்டும். அதேபோல் Flash Films சரியான நேரத்தில் படத்திற்கான பட்ஜட்டை கொடுத்து படப்பிடிப்பு நடப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். நான் எட்டு மாதங்களுக்குள் படத்தை முடிக்காவிட்டாலும், அவர்கள் படத்திற்கான பட்ஜெட்டை முழுதாக தராமல் போனாலும் ஒப்பந்தத்தை மீறியதாக கருதப்படும்.moodar koodam naveen' letter to media

அக்டோபர் 31-2016 அன்று விசாகனுடைய ஸ்டுடியோவில் நான் அவருக்கு முழு ஸ்கிரிப்டை சொன்னேன். இரவு 9 மணிக்கு ஆரம்பித்து நள்ளிரவு 1 மணி வரை ஸ்கிரிப்ட் சொன்னேன். நான் கதை சொல்லும்போது எங்களுடன் விசாகனுடைய சித்தப்பா ராகுலன் மற்றும் மெனேஜர் வாசுதேவன் ராமமூர்த்தி இருந்தனர். கதை கேட்டு முடித்தவுடன் ராகுலன் ‘குட் ஸ்கிரிப்ட்’ என்றார். அதற்கு விசாகன் ‘சித்தப்பா, எதுக்கு இந்த கஞ்சத்தனம். இப்படி ஒரு ஸ்கிரிப்ட நான் இதுவரைக்கும் கேட்டதும் இல்ல பாத்ததும் இல்லை. இந்த ஸ்கிரிப்டுக்காகத்தான் கடவுள் என்னோட முந்தைய படங்கள தடை பண்ணியிருக்கார்னு நெனைக்கறேன்’ என்று புலகாங்கிதம் அடைந்து பாராட்டினார். நவம்பர் மாதம் படப்பிடிப்பிற்கு சென்றுவிடலாம் என்று நான் சொன்னேன். ஒரு வாரத்திற்கு பிறகு டீமானிடைசேஷன் அமுல்படுத்தப் பட்டுள்ளதால், ஜனவரியில் படப்பிடிப்பிற்கு செல்லலாம் என்று அவர்கள் கூறினார்கள். நானும் நிலமையை புரிந்துகொண்டு பொறுமையாக இருந்தேன்.

இதற்கு இடையில் நான் Pre-Production பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன். என்னுடைய டெக்னீஷன்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் கொடுத்தேன். இஸ்தான்புல் லைன்புரடீயுசர் பசாக் என்கிற துருக்கி பெண்ணிடம் லொக்கேஷன் பார்ப்பதற்கும் வீசாவிற்கும் பணம் கொடுத்தேன். என் கேமராமேனுடன் சேர்ந்துஅமெரிக்காவில் லொக்கேஷன் தேடினேன். அமேரிக்காவிலிருந்து என் ஒளிப்பதிவாளரை இந்தியா அழைத்து வந்தேன். கொல்கத்தாவில் லொக்கேஷன் தேடல், கதைக்கு தேவையான ப்ராப்பர்டிஸ் பர்சேஸ், காஸ்டியூம் பர்சேஸ், ஆஃபீஸ் நிர்வாகம், சாப்பாடு போக்குவரத்து என்று பல விதங்களில் Pre-Production செலவுகள் ஆனது. படப்பிடிப்பிற்கான எல்லா வேலைகளையும் சேர்த்தே செய்ததால் அவர்கள் எனக்கு pre-production பணிகளுக்காக கொடுத்த 44.5 லட்சம் ருபாய் பத்தாமல் போனது.moodar koodam naveen' letter to media

ஜனவரி 2017 நான் அவர்களிடம் படப்பிடிப்பிற்கு செல்லலாம், காலம் தாமதம் ஆகும்போது செலவுகள் அதிகம் ஆகும், அதனால் உடனே படப்பிடிப்பிற்கு சென்று படத்தை முடிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர்கள் சம்மந்தம் இல்லாத பல காரணங்கள் சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக தாமதம் செய்துகொண்டே இருந்தனர். 8 மாதங்கள் இப்படியே ஓடியிருக்க மார்ச் மாதம் ராகுலன் என்னையும் என் மேனேஜர் வாசுவையும் அழைத்து தாமதத்திற்கான காரணத்தை சொன்னார். தங்கள் குடும்பத்தில் ஒரு துர்சம்பவம் நடந்துள்ளதாகவும் அதனால் அனைவரும் உடைந்து போயிருப்பதாகவும் சொன்னார். நானும் நிலமையை புரிந்துகொண்டு, இன்னும் ஒரு மாதம் தாமதமானாலும் பரவாயில்லை, பொறுமையாகவே படப்பிடிப்பிற்கு செல்லலாம் என்று கூறினேன்.

அதற்கு ஒரு வாரத்திற்கு பின் சுவர்ணா சேதுராமன் எங்களை அவருடைய அலுவளகத்திற்கு அழைத்தார். விசாகன் அமெரிக்கா செல்கிறான், இனி இந்தப் படம் நடக்காது, நீங்கள் வாங்கிய pre-production பணத்தில் 20 லட்சம் ரூபாயை திருப்பி தர வேண்டும் என்று கூறினார். நான் படத்தை தொடராவிட்டால் எனக்கு நஷ்டமாகும் என்று கூறினேன். படப்பிடிப்பிற்கான வேலைகளுக்காக பணம் செலவு செய்திருப்பதால் படப்பிடிப்பு தொடராமல் போனால் அந்த செலவுகள் வீணாக போகும் என்றேன். இந்த படம் கைவிடப்பட்டால் என்னுடைய 8 மாத உழைப்பு வீணாகும், அதற்கு என்ன இழப்பீடு என்றும் கேட்டேன். மேலும் இந்த படத்திற்காக எனக்கு வந்த மூன்று பெரிய பட வாய்ப்புகளை நான் இழந்திருந்தேன். 

அதற்கு சுவர்ணா சேதுராமன் அவர்கள் என்னை மிரட்டும் தொனியில் பேசினார். அவர் என்னை மிரட்டியதற்கு  ராகுலன் மற்றும் வாசுதேன் ராமமூர்த்தி இருவருமே சாட்சி. அவர் மிரட்ட ஆரம்பித்ததால் நான் ‘படம் செய்து தர நான் எப்பொழும் தயார், படப்பிடிப்பிற்கான பட்ஜெட்டை கொடுத்தால் நான் படம் செய்து தருகிறேன்’ என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினேன். அதற்கு பிறகு மூன்று மாதங்கள் காத்திருந்தேன். அவர் படப்பிடிப்பு தொடங்குவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக தயாரிப்பாளர் சங்கத்தில், நான் ஸ்கிரிப்டு எழுதவில்லை அதனால் இந்த படத்தை ட்ராப் செய்ததாகவும், நான் அட்வான்ஸ் திருப்பி தரவில்லை என்றும் என் மீது பொய் புகார் கொடுத்தார்.

 நான் ஸ்கிரிப்ட் எழுதி படப்பிடிப்பிற்கு தயாராக இருந்ததற்கு விசாகன், ராகுலன் மற்றும் வாசுதேவன் சாட்சி. படம் நடக்காமல் போனதன் காரணம் இவர்கள் அனைவருக்கும் தெரியும். அதை நான் நாகரீகம் கருதி வெளியில் சொல்லாமல் இருக்கிறேன். ஆனால் சுவர்ணா சேதுராமன் அவர்கள் என் பெயருக்கு களங்கம் கற்பிக்கிறார். பொய்வழக்கு போட்டு என்னுடைய ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ படத்தின் ரிலீசுக்கு தடை வாங்கியுள்ளார்.எனக்கு எந்தவிதமான நோட்டிபிகேஷனும் கொடுக்காமல் தன் பணபலத்தை உபயோகித்து தடை வாங்கியுள்ளார். moodar koodam naveen' letter to media

அலாவுதீனின் அற்புத கேமரா திரைப்படம் எனது முந்தய படங்களை போலவே எனது நண்பர்கள் பணம் மற்றும் ஒரு பெரிய பைனான்சியரிடம் பைனான்ஸ் வாங்கி எடுக்கப்பட்ட படம். இந்த படத்திற்கும் சுவர்ணா சேதுராமன் அவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. மிகுந்த பொருட்செலவில் முழுதும் ஐரோப்பாவில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தாமதமானால் எனக்கும் பணம் போட்ட என் நண்பர்களுக்கும் பெருத்த நஷ்டம் ஏற்படும். 

நான் Flash Films நிறுவனத்திடம் வாங்கியது அட்வான்ஸ் இல்லை, படத்தின் pre-production பணிகளுக்கான பணம். அவருடன் படம் செய்ய காசு கேட்கவில்லை. என்னிடம் சுவர்ணா சேதுராமன் கையெழுத்திட்ட first copy agreement இருக்கிறது. நான் pre-production பணிகளுக்காக செய்த செலவு கணக்குகள், டெக்னீஷன்களுக்கு கொடுத்த அட்வான்சுக்கான bank transactions அனைத்தும் முறையாக உள்ளது. என் தரப்பில் முறையான ஆதாரங்கள் உள்ளன. என் தரப்பு ஆதரங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். அவர்கள் தரப்பில் இருக்கும் விசாகனையும் அவருடைய சித்தப்பா ராகுலனையும் கேட்டாலே நான் சொல்வது உண்மை என்றும், சுவர்ணா சேதுராமன் சொவது அனைத்தும் பொய் என்றும் சொல்வார்கள். அவர்கள் மனசாட்சியின்படி உண்மை பேசுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இன்னமும் இருக்கிறது.

நான் என் தரப்பில் இயக்குனர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளேன். நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் எனும் நம்பிக்கையில் வழக்கை நடத்துகிறேன். சுவர்ணா சேதுராமன் ஊடகங்களில் நான் ஸ்கிரிப்ட் எழுதாததால் படம் நடக்கவில்லை என்றும், வாங்கிய பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றிவிட்டதாகவும் பொய்யாக அவதூறு பரப்புகிறார். உடன் இருந்த அனைவருக்கும் அவர் சொல்வது பொய் என்று தெரியும். உண்மை மிக விரைவில் வெளிவரும்.

Follow Us:
Download App:
  • android
  • ios