நடிகர் மம்மூட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரின் உடல்நிலை பற்றிய தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mammootty Health Update : மலையாள நடிகர் மம்மூட்டியின் உடல்நலம் குறித்த செய்தியால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மம்மூட்டிக்கு முத்தம் கொடுக்கும் பழைய புகைப்படத்தை மோகன்லால் பகிர்ந்துள்ளார். மோகன்லால் எதுவும் எழுதவில்லை என்றாலும், மம்மூட்டி நலம் பெற்றதில் மகிழ்ச்சி தெரிவிக்கும் பதிவு இது என்பது தெளிவாகிறது. பலர் மம்மூட்டிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து புகைப்படத்திற்கு கமெண்ட் செய்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மம்மூட்டி நலம் பெற்றதில் மகிழ்ச்சி தெரிவித்து ஜான் பிரிட்டாஸ் எம்.பி.யும் பதிவிட்டிருந்தார். “என் அன்பு மம்மூக்கா... இன்னும் எவ்வளவோ தூரம் எங்களை கைப்பிடித்து அழைத்துச் செல்ல வேண்டும். நடிப்பின் எத்தனை எத்தனை பரிமாணங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். மிகுந்த மகிழ்ச்சியுடன், நிறைந்த அன்புடன்” என்று மம்மூட்டியுடனான புகைப்படத்தைப் பகிர்ந்து ஜான் பிரிட்டாஸ் எழுதியுள்ளார்.

மம்முட்டிக்கு குவியும் வாழ்த்து

மாலா பார்வதியும் ஏற்கனவே முகநூலில் பதிவிட்டிருந்தார். “இதைவிட ஒரு நல்ல செய்தி இல்லை. மம்மூக்கா முழுமையாக குணமடைந்துவிட்டார். சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும், பராமரித்த அனைவருக்கும், மருத்துவமனைக்கும் நன்றி. அன்பு. ஆம். ராஜா திரும்பி வருகிறார். மகிழ்ச்சி, நன்றி. பிரார்த்தனைகள் பலன் அளித்துள்ளன” என்று மாலா பார்வதி குறிப்பிட்டிருந்தார்.

மம்மூட்டியின் சொந்த உதவியாளரும் ஒப்பனையாளருமான எஸ். ஜார்ஜும் இதுகுறித்து முகநூலில் பதிவிட்டுள்ளார். “மகிழ்ச்சியில் நிறைந்த கண்களுடன் கைகூப்பி உங்கள் முன் நான் நிற்கிறேன். பிரார்த்தித்தவர்களுக்கும், துணையாக நின்றவர்களுக்கும், எதுவும் ஆகாது என்று கூறி ஆறுதல் கூறியவர்களுக்கும், சொல்லில் அடங்கா அன்புடன் அன்பானவர்களே... நன்றி!” என்று ஜார்ஜ் பதிவிட்டுள்ளார். மம்மூட்டியுடன் நெருங்கிய நட்பு கொண்ட நடிகர் ரமேஷ் பிஷாரடியும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். “எல்லாம் சரியாகிவிட்டது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மம்மூட்டியின் நலம் குறித்து சமூக ஊடகங்களில் முதலில் பதிவிட்டவர் தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப். “உலகம் முழுவதும் உள்ள பலரின் பிரார்த்தனைக்கு பலன் கிடைத்தது, கடவுளே நன்றி, நன்றி, நன்றி” என்று ஆன்டோ ஜோசப் பதிவிட்டார். இது மம்மூட்டியின் நலம் குறித்த பதிவு என்று ரசிகர்கள் உடனே யூகித்தனர். இனி பொதுவெளியில் மம்மூட்டியின் வருகைக்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.