மோகன்லாலின் த்ரிஷியம் 3 படத்தில் போஸ்டர் வைரலாகி வருகிறது.
த்ரிஷியம் 3 குறித்த அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. அந்த போஸ்டரில் மோகன் லால் ஹேண்ட் கேப் உடன் அமர்ந்திருக்கிறார். த்ரிஷியம் 3 போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது..
பிரபல மலையாள சூப்பர் ஹீரோ மோகன்லாலின் சிறந்த படங்களில் ஒன்றான த்ரிஷ்யம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த படமாகும். இதன் இரண்டாவது பாகத்தை அடுத்து மூன்றாவது பாகமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். மூன்றாவது பாகத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சமூக வளையல் பரபரப்பாக பேசப்பட்டது.
மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்கும் ஒரு பெரிய திட்டம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் 17ஆம் தேதி வெளியாகலாம் என கூறப்பட்டது. இது த்ரிஷ்யம் 3 அல்லது எம்புரான்பற்றியதாக இருக்கலாம் என்றும் ரசிகர்கள் ஊகித்து வந்தனர். முதலில் இயக்குனர் பர்ரோஸின் படப்பிடிப்பை படப்பிடிப்பை முடித்த மோகன்லால் இப்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட ஜீத்து ஜோசப்பின் ராமின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு...வர வர உடையை குறைக்கும் பிரியா பவானி..வெளிநாட்டில் ஹாட் பரப்பும் நாயகி
இதற்கு இடையே எம்பிரான் படத்தின் ஸ்கிரிப்ட் முடிந்து விட்டதாக பிரித்விராஜ் ஏற்கனவே அறிவித்து இருந்தார். இந்த பெரிய பட்ஜெட் படத்தில் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. முன்னதாக த்ரிஷியம் படம் வெளியான பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர், மூன்றாம் பாகம் என்னும் இந்த உச்சத்தை அடைய பல நிகழ்வுகள் நடக்க வேண்டும். இது குறித்து நான் முயற்சி செய்து பார்க்கிறேன். அப்படி நடந்தாலும் உடனே எதுவும் நடக்காது குறைந்தது இரண்டு அல்லது மூன்று வருடங்கள் ஆகும் என்று இயக்குனர் கூறியிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...சமந்தா ரேஞ்சுக்கு ஒர்கவுட் செய்யும் ஐஸ்வர்யா ராஜேஷ்! வைரலாகும் வீடியோ இதோ
இந்நிலையில் த்ரிஷியம் 3 குறித்த அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. அந்த போஸ்டரில் மோகன் லால் ஹேண்ட் கேப் உடன் அமர்ந்திருக்கிறார். த்ரிஷியம் 3 போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது..