த்ரிஷா பற்றிய சீக்ரெட்... திடுக்கிடும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய மீரா மிதுன்!
சோசியல் மீடியாவில் தொடர்ந்து சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத விஷயங்களை பகிர்ந்து வரும், நடிகையும், பிரபல மாடலுமான மீரா மீதுன், தற்போது திரிஷா பற்றி வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோசியல் மீடியாவில் தொடர்ந்து சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத விஷயங்களை பகிர்ந்து வரும், நடிகையும், பிரபல மாடலுமான மீரா மீதுன், தற்போது த்ரிஷா பற்றி வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் திரையுலகில் தான், நெப்போலிடிசம் அதிகம் உள்ளது, இதனால் திறமை இருக்கும் பல பிரபலங்களின் வாய்ப்புகள் பறிக்கப்படுவதாகவும், நடிகர் சுஷாந்த் தற்கொலைக்கும் இது தான் காரணம் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது கோலிவுட் திரையுலகில் சாதி ரீதியாகவும், அதனால் த்ரிஷா போன்றவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகை மீரா மிதுன்.
இதுகுறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதில் கூறியுள்ளதாவது, ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது த்ரிஷா, பீட்டா உறுப்பினர் என்பதற்காக எல்லோரும் தூற்றினீர்கள். ஆனால் நான் ஒரு உண்மையை த்ரிஷா குறித்து கூறிய போது நான் உங்களுக்கு கெட்டவளாக தெரிகிறேன், த்ரிஷாவை நீங்கள் ஆதரித்து பேசுகிறீர்கள்.
மேலும் செய்திகள்: நேரலையில் கிழித்து தொங்கவிட்ட விட்ட வனிதா..! வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய லட்சுமி ராமகிருஷ்ணன்..!
பீட்டா உறுப்பினரான த்ரிஷா இன்று வரைக்கும் ஆடு கோழி வெட்டப்படுவது குறித்து கவலைப்பட்டார்களா? அவருக்கு நம் நாட்டு காளை மாடுகள் மட்டும்தான் உயிரினமாக தெரிகிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஜல்லிக்கட்டு நேரத்தில் த்ரிஷாவின் அம்மா மட்டும் தான் மன்னிப்பு கேட்டார். த்ரிஷா எதுவுமே சொல்லவில்லை அப்படியே விட்டு விட்டார்.
நெப்போலிடிசம் என்பது ஜாதியில் ரீதியாதான் தான் வருகிறது. நான் ஓப்பனாக சொல்வது என்னவென்றால் த்ரிஷா 15 வருடங்களுக்கு மேலாக சினிமா துறையில் இருப்பதும், இன்னமும் படங்கள் நடித்து கொண்டு இருப்பதற்கும் ஒரே காரணம் அவர் அப்பா உயர் ஜாதியை சேர்த்தவர் என்பதால்தான் என இதுவரை யாருக்கும் தெரியாத சீக்ரட் தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்: தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்... குடும்பத்துடன் இருக்கும் அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ..!
நான் பெரியார் பற்றி ஒரு ட்விட் போட்டேன், அதை பார்த்து கூட பலர் என்னை கிண்டல் செய்தார்கள். இந்த நெப்போலிடிசத்துடன் கூடிய ஜாதி ஒழிய வேண்டும் என்பதற்காக பெரியார் எவ்வளவு பாடுபட்டார்? அவ்வளவு போராடினார். பெரியார் பிறந்த பூமி, பெரியார் பிறந்த மண் என்று நீங்கள் சும்மா சொல்லி கொண்டே இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் யாருக்கு சப்போர்ட் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களுக்கே தெரியும். இந்த ஜாதியுடன் கூடிய நெப்போடிசம் ஒழிய வேண்டும் என்றால் இன்னொரு பெரியார் பிறந்துதான் இதை மாற்ற வேண்டுமென்றால், பெரியாரின் வழியை பின்பற்றும் நானே உருவெடுத்து இதை கண்டிப்பாக மாற்றி காட்டுவேன் என ஆக்ரோஷமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ இதோ...