காதலை வெளிப்படையாக சொன்ன மஹத்...! கதறி அழுத யாஷிகா..!
பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் சீசன் போன்று விறுவிறுப்பாக இல்லை என்றும், முதல் சீசனை பார்த்து தற்போது விளையாடி வரும் போட்டியாளர்கள் சிலர் போலியான முகத்திரையோடு நடித்து வருவதாக ரசிகர்கள் பலர் தங்களுடைய கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில், உண்மையான கணவன் மனைவி கலந்து கொண்டுள்ளதால், இவர்கள் தங்களுடைய கருத்து வேறுபாடை வைத்து சண்டை போட்டுக்கொண்டு கொள்வதாகவும் கூறப்படுகிறது.
இவை அனைத்தையும் தகர்க்கும் விதத்தில் காதலோடு வெளியாகியுள்ளது ஒரு ப்ரோமோ... இந்த ப்ரோமோவில் எப்போதும் மிகவும் ஜாலியாக இருக்கும் யாஷிகா அழுகிறார்.
பின் மஹத் ஒரு காதல் கதையை கூறி, பாடல் பாடுவது போலும் உள்ளது. 'தான் ஒரு பெண்ணை காதலித்தேன்... உயிருக்கு உயிரா காதலித்தேன் ஆன அவள் என்னை விட்டுட்டு போய்ட்டா என சொன்னதும் யாஷிகா அழும் காட்சி காட்டப்படுகிறது.
இதைதொடர்ந்து சிம்புவோட நண்பன் என்று நிரூபிக்கும் விதத்தில் 'ஏண்டி இப்படி பண்ண... என தொடங்கும் ஒரு பாடல் பாடுகிறார். யாஷிகாவும் தனியாக பெட்டில் படுத்து அழுகிறார்'.
இதன் மூலம் இன்று, பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய வாழ்க்கையில் அவரவர் கடந்து வந்த காதல் நினைவுகளை பகிர்ந்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுக்கு அப்பறம் ஏண்டி இப்படி பண்ணுன னு ஏமாற்றம் தந்தாயே...பெண்ணே பெண்ணே என்ன பாவம் செஞ்சேன் னு பீல் பண்ணி ஒரு பாடல் பாடுறாரு... தொடர்ந்து யாஷிகா அழற மாதிரி இருக்கு சோ இன்னைக்கு அவங்க அவங்க தங்களோட லவ் ஸ்டோரிய மனம் திறந்து சொல்லுவாங்கனு தோணுது ...
#காதல்! 💔💔 #பிக்பாஸ் - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/tTFQKMCsbQ
— Vijay Television (@vijaytelevision) June 29, 2018