Vairamuthu : "என் இதயத்தை அசைத்த உங்கள் வரிகள்".. சீனு ராமசாமியின் புதிய கவிதை தொகுப்பு - வாழ்த்திய வைரமுத்து!
Seenu Ramasamy : பிரபல இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ள தனது நான்காவது கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். அதை படித்து பாராட்டியுள்ளார் பாடலாசிரியரும் மூத்தக் கவிஞருமான வைரமுத்து.
கடந்த 2007 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் வெளியான "கூடல்நகர்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்கியவர் தான் சீனு ராமசாமி. கடந்த 2010 ஆம் ஆண்டு அவருடைய இயக்கத்தில் வெளியான விஜய் சேதுபதியின் "தென்மேற்கு பருவக்காற்று" என்ற திரைப்படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரை உலகில் தொடர்ச்சியாக நல்ல பல திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குனர் சீனு ராமசாமி "நீர்ப்பறவை", "இடம்பொருள் ஏவல்", "தர்மதுரை", "கண்ணே கலைமானே" மற்றும் "மாமனிதன்" உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தற்பொழுது ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் காயத்ரி நடிப்பில் உருவாகும் "இடி முழக்கம்" என்கின்ற திரைப்படத்தை அவர் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே மூன்று கவிதை தொகுப்புகளை வெளியிட்டுள்ள இயக்குனர் சீனு ராமசாமி தற்பொழுது, தனது நான்காவது கவிதை தொகுப்பை வெளியிட்டுள்ளார். அதற்கு "மாசி வீதியின் கல் சந்துக்கள்" என்று பெயரிட்டுள்ளார். இந்த கவிதை தொகுப்பை படித்த மூத்த பாடலாசிரியரும், கவிஞருமான கவிப்பேரரச வைரமுத்து அவர்கள் சீனு ராமசாமி பாராட்டி மடலொன்று எழுதி இருக்கிறார்.
அதில் "அன்புமிகு சீனு.. மாசி வீதியில் கல் சந்துக்கள் பார்த்தேன்.. ஈரமும் சாரமும் மிக்க கவிதைகள் கவனம் கீர்த்தன. புருவம் உயர்த்தின, சான்றாக "மணல் திருடனுக்கும் அஸ்தி கரைக்க தேவைப்படுகிறது நதி", "ஏழையின் உடலை அவன் உறுப்புகள் கைவிடுவதில் துயரம்" போன்றவை இதயத்தை அசைத்தன. தொகுப்பில் செம்மையான நோக்கிய நகர்வு தெரிகிறது கலைத்துறை கவித்துறை இரண்டிலும் உச்சம் தொடும் அசுரத்தனம் தெரிகிறது வாழ்த்துக்கள்" என்று வைரமுத்து தனது மனதார பாராட்டி இருக்கிறார்.