நடிகர் லாரன்ஸ் ஜல்லிக்கட்டுக்கு அவசரம் கொண்டு வந்து பின் தற்போது நிரந்தர சட்டம் கொண்டுவர ஏற்பாடுகள் செய்து வருவதற்காக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வதை மாணவர்களுடன் சென்று நடிகர் லாரன்ஸ் நன்றி தெரிவித்தார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அப்போது பேசிய அவர், தான் முதலமைச்சரிடம் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் அதற்கு முதலமைச்சர் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறினார் .

மேலும் இந்த போராட்டம் நல்ல முறையில் சந்தோஷமாக நிறைவு செய்ய வேண்டிய போராட்டம் என்றும் ஆனால் போலீசார் தீடீர் என மாணவர்கள் மீது தடியடி நடத்தியதன் காரணமாக இது கலவரமாக மாறியது எனவும் கூறினார்.

இந்த கலவரத்தால் பாதிக்க பட்ட ஐஸ் ஹவுஸ் மீனவா மக்களுக்கு, நிவாரணம் வழங்குவது குறித்தும் முதலமைச்சருடன் பேசியதாகவும் விரைவில் அவர்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளதாக லாரன்ஸ் தெரிவித்தார்.