'கால பைரவா' வாக கலக்க வரும் ராகவா லாரன்ஸ்..!
மாபெரும் வெற்றி பெற்ற காஞ்சனா 2 படத்திற்கு பிறகு தற்போது பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் படம் காஞ்சனா 3.
இந்தப் படம் வெளி வந்த பிறகு தனது அடுத்த படமாக ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும் 'கால பைரவா' படத்தின் வேலைகளை தொடங்குகிறார் லாரன்ஸ்.
'கால பைரவா' படத்தை இயக்கி நடிக்கும் லாரன்ஸ் காஞ்சனா 3 படத்தின் வெளியீட்டுக்கு பிறகு இந்த படத்தை வெளியிடும் திட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதைத் தவிர இன்னும் 2 கதைகளை தேர்வு செய்து வைத்திருக்கும் லாரன்ஸ் அது பற்றிய தகவல்களை மார்ச் மாதம் அறிவிக்க திட்டமிட்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ரகவா லாரன்ஸ், நடிகர் என்பதையும் தாண்டி பல இளைஞர்கள் மத்தியில், போராட்டங்கள் மற்றும் சமூக சேவைகளில் தொடர்ந்து பங்கு கொண்டு பல நற்காரியங்களை செய்து வருவதால் இவரின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியிலும், இளைன்கர்கள் மத்தியிலும் மிக பெரிய வரவேற்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.