Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவால் ICUவில் அட்மிட்டான லதா மங்கேஷ்கர்..இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா?..

Lata Mangeshkar in ICU : லதா மங்கேஷ்வரின் செய்தித் தொடர்பாளர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் லதா மங்கேஷ்கர் இன்னும் ஐ.சி.யு.வில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருவதாக கூறியுள்ளார்.

Lata Mangeshkar admitted to ICU by Corona
Author
Chennai, First Published Jan 21, 2022, 3:14 PM IST

இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் அதிகரித்துவருகின்றன. 3ம் அலைக்கான அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஜனவரி 31ம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் வேகத்தில் மின்னல் வேகத்தில் இருந்து வருகிறது. சென்னை, செங்கலபட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த 6ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சினிமா பிரபலங்கள் பலருக்கும் கொரோனா உறுதியாகிவருகிறது. தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, இசையமைப்பாளர் தமன், பாடகர் சோனு நிகாம் மற்றும் நடிகை த்ரிஷா நடிகர் சத்யராஜ், இயக்குனர் பிரியதர்ஷன், அருண்விஜய், குஷ்பூ என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இவர்களில் பலரும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.

Mangeshkar affected by corona ..

அந்த வகையில் தற்போது இந்தியாவின் நைட்டிங்கேல்’ என அழைக்கப்படும் பழம்பெரும் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு கொரோனா மற்றும் நிமோனியா பாதிப்பால் லதா மங்கேஷ்கர் மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது லதா மங்கேஷ்வரின் செய்தித் தொடர்பாளர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் லதா மங்கேஷ்கர் இன்னும் ஐ.சி.யு.வில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார். அற்புதமான மருத்துவர்கள் குழு கண்காணிப்பின் கீழ் லதா தொடர்ந்து ICU வில் இருக்கிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. விரைவில் குணமடைந்து வீடு திரும்ப அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios