ஸ்ரீ பிரியாவிற்கு பதிலடி கொடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்.......!!!
தொலைக்காட்சிகளில் பஞ்சாயத்து நடத்தும் நடிகைகள் பற்றி சம்மேபத்தில் ஸ்ரீ பிரியா தனது கருத்தை கூறி இருந்தார். இதற்கு பலரும் ஸ்ரீ பிரியாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
மேலும் இந்த நிகழ்ச்சிகள் பற்றி ஸ்ரீ பிரியா கூறுகையில், உங்களுக்கு பிரச்சனைகள் என்றால் நீதிமன்றம் செல்லுங்கள், ஏன் நடிகைகளிடம் வருகிறீர்கள், அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு நிகழ்ச்சி நடத்துபவர்கள்’ என கூறினார்.
இதற்கு லட்சுமி ‘ஏன் பணத்தை வாங்கிக்கொண்டு சமூக அக்கறைக்கு பேசக்கூடாதா?, எல்லோரும் இங்கு பணத்திற்காக தான் வேலை செய்கிறார்கள்.
ஆனால், நான் பேசுவது சமூக நலனுக்காக, இதில் எந்த தவறும் இல்லை’ என கூறியுள்ளார்.