நடிகை  ஒருவரின் அழகில் மயங்கி, கிடந்த ஹீரோ ஒருவரை... அவரின் பெற்றோர் செய்வினை செய்து பிரிந்ததாக கிசுகிசு ஒன்று வேகமாக பரவி வருகிறது. 

பார்ப்பதற்கு ஹோம்லி லுக்கில், கொள்ளை அழகுடன் ஜெயிக்கும் நடிகை ஒருவர்... ஆரம்பத்தில் குடும்ப பாங்கான படங்களில் நடித்து, பின்னர் கவர்ச்சியிலும் கலக்கினார். பட வாய்ப்புக்காக முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், என ரவுண்டு கட்டி அட்ஜஸ்ட்மென்ட் செய்து, நடிக்க வாய்ப்பைப் பெற்றாலும்... இவரின் சுயரூபம் தெரியாத பலர் இவரின் வளர்ச்சிக்கு காரணம் அவரின் திறமை என பேசி வந்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் அழகும், வசதியும் கொண்ட நடிகர் ஒருவர் , இவருடன் இணைந்து நடித்த முதல் படத்திலேயே அழகில் மயங்கி, காதல் வசப்பட்டு உள்ளார். பின்னர் நடிகையும், அவரின் அழகுக்கும்.. பணத்துக்கும்... ஆசைப்பட்டு செட்டில் ஆகி விடலாமா? என நினைக்க, நடிகரின் பெற்றோர் அந்த நடிகையின் அந்தரங்க விஷயங்களை எடுத்துக் கூறி, நடிகரின் மனதை மாற்ற முயற்சித்துள்ளனர்.

ஆனால் விடாப்பிடியாக நடிகையின் காதல் மயக்கத்தில் இருந்த அந்த ஹீரோ பெற்றோர் சொன்னதை கண்டு கொள்ளவில்லையாம். எப்படியும் மகனை அந்த ஹீரோயினிடமிருந்து பிரிக்க வேண்டும் என்பதற்காக, மலையாள மந்திரவாதி ஒருவரை சந்தித்து, நடிகையை தன் மகனிடம் இருந்து பிரிக்க வேண்டும் என சில லட்சங்களை அள்ளி விட்டு அந்த ஹீரோவின் பெற்றோர் செய்வினை வைத்து பிரித்தார்களாம்.

 நடிகையின் காதலிலிருந்து மீண்ட ஹீரோவை வசதி நிறைந்த அழகான பெண் ஒருவரை பார்த்து திருமணம் செய்து வைத்தனர். அந்த வாழ்க்கையிலும் சில பல பிரச்சனைகள் வந்தாலும், பின்னர் இருவரும் தற்போது மனம் ஒற்று வாழ்ந்து வருகிறார்கள்.