பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மானாட மயிலாட', 'நாளைய இயக்குனர்' போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் 'கீகீ' என அனைவராலும் அழைக்கப்படும் கீர்த்தி. 

 பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மானாட மயிலாட', 'நாளைய இயக்குனர்' போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் 'கீகீ' என அனைவராலும் அழைக்கப்படும் கீர்த்தி.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இவர், பிரபல நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் - பூர்ணிமா நட்சத்திர தம்பதிகளின் மகன் சாந்தனுவை, காதலித்து கடந்த 2015 ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்பும், தன்னுடைய தொகுப்பாளர் பணியை தொடர்ந்து வருகிறார் கீர்த்தி. இந்நிலையில் தன்னுடைய மாமனார் - மாமியார் பற்றி கீர்த்தி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் "என் மாமனார் வீட்டில் அதிக நேரம் இருக்க மாட்டார். மாமியாரை சுலபமாக ஏமாற்றி விடலாம். எது சொன்னாலும் அவர் நம்பி விடுவார். என் பிறந்த வீட்டில் இருந்ததை விட, புகுந்த வீட்டில் தான் சுதந்திரமாக இருக்கிறேன்" என்கிறார் கீர்த்தி.