Kangana Ranaut : சக்தி வாய்ந்த பெண் நான்.... இன்ஸ்டா பதிவு மூலம் பரபரப்பை ஏற்படுத்திய கங்கனா
உச்சநீதிமன்றத்தில் கங்கனா மீது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தான் நாட்டின் சக்தி வாய்ந்த பெண் என்று அவர் தன்னைத்தானே அறிவித்துக்கொண்டுள்ளார்.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் சமூக வலைதள பதிவுகளை தணிக்கை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சரன்ஜித் சிங் சந்திரபால் என்பவர் இதுதொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில், சீக்கியர்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தை கங்கனா பதிவிட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
கருத்துரிமையை சமூக வலைதளங்களில் தவறாக கங்கனா பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டிய அவர், கங்கனா ரனாவத்தின் சமூக வலைதள பதிவுகளை தணிக்கை செய்ய வேண்டும் என்றும், அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை மும்பைக்கு மாற்றி விசாரிக்க கோரியும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் ஆறு மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து 2 ஆண்டுகளுக்குள் விசாரணை நடத்தி முடிக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தது.
இவ்வாறு, உச்சநீதிமன்றத்தில் கங்கனா மீது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தான் நாட்டின் சக்தி வாய்ந்த பெண் என்று அவர் தன்னைத்தானே அறிவித்துக்கொண்டுள்ளார். அவர் இன்ஸ்டாகிராமில் இதனை பதிவிட்டுள்ளார். டுவிட்டரில் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததால் கங்கனாவின் டுவிட்டர் கணக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிரந்தரமாக முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.