kamalhassan talking sbb

இளையராஜா மற்றும் எஸ்.பி.பிக்குள் ஏற்பட்ட பிரச்சனை இன்னும் ஓயாமல் காட்டு தீ போல் பரவிக்கொண்டுதான் இருக்கிறது. மேலும் இதுகுறித்து பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த பிரச்சனைக்கு இடையே எஸ்.பி.பியின் இசை கச்சேரி நேற்று அமெரிக்காவில் உள்ள சான்ஜோஸ் நகரில் நடைபெற்றது.

இந்த கச்சேரியில் எஸ்.பி.பி, இளையராஜாவின் ஒரு பாடலை கூட படவில்லையாம், மற்ற இசை கலைஞர்களின் பாடல்களை பாடியுள்ளார், அங்கு கூடியிருந்த அனைவரும் இந்த பாடல்களை கேட்டு ரசித்தனர் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த பிரச்சனை தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் எஸ்.பி.பியை தொடர்புகொண்டு நீண்ட நேரம் பேசி ஆறுதல் கூறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.