'காலா' குறித்து மனம் திறந்த பா.ரஞ்சித்....
கோலிவுட் இயக்குனர்கள் அனைவருக்கும் திரைப்படத்தையாவது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்க வேண்டும் என்பது ஆசை உண்டு. ஆனால் அது ஒரு சிலருக்கு மட்டுமே சாத்தியம்.
இந்நிலையில் இயக்குனர் ரஞ்சித் திரைப்பட துறைக்கு வந்து சில வருடங்களே ஆகியுள்ளபோதும். இவர் ரஜினிகாந்தை வைத்து இரண்டாவது திரைப்படத்தை இயங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.
கடந்த வருடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இவர் இயக்கத்தில் வெளிவந்த, கபாலி திரைப்படத்திற்கு உலக அளவில் மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீண்டும் ரஜினியை வைத்து இயக்கம் ரஞ்சித் இந்த படத்தின் தலைப்பை இன்று வெளியிட்டார் இது குறித்து அவர் பேசுகையில்,
இந்த படத்தின் தலைப்பை முதலில் ரஜினிகாந்திடம் கூறியதுமே அவருக்கு அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. மேலும் கரிகாலன் என்பது அவருக்கு மிகவும் பிடித்த பெயர். அதே போல காலா என்றால் எமன் என்கிற ஒரு அர்த்தமும் உள்ளது.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 28 தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், இந்த படத்தில் நடிப்பவர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.