Asianet News TamilAsianet News Tamil

ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்கம் நாளை அஞ்சலி - முன்னணி நடிகர்கள் பங்கேற்பு

jayalalitha passed-away-z9dr3y
Author
First Published Dec 10, 2016, 3:16 PM IST


மறைந்த முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நாளை அஞ்சலி செலுத்தப்பட உள்ளது . இதில் திரையுலகின் முன்னணி நடிகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இது குறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
நடிகர் சங்கத்தின் மரகத மணியாக திகழந்த அம்மா என்று மக்கள் தங்கள் மனதில் வைத்து பூஜிக்கும் பேரன்புக்கும் மரியாதைக்கும் உரிய கலையுலக சகோதரி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் நம்மை மீளா துயரில் நம்மை தவிக்கவிட்டு சென்று இருக்கிறார்.

jayalalitha passed-away-z9dr3y
 அன்னாருடைய ஆத்மா சாந்தி அடையவும் , அவர்தன் நினைவுகளை பகிர்ந்து கொள்ளவும் பெருமைகளை பதிவுசெய்யவும் தென்னிந்திய நடிகர் சங்கம் வருகிற ஞாயிறு மாலை 5 மணிக்கு கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நினைவு அஞ்சலி நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது. 
கலைக்காகவும் , பொது பணிக்காகவும் தம் வாழ்வனைத்தும் அர்பணித்த அவ்வாத்மாவிற்கு அஞ்சலி செலுத்த நடிகர் சங்க உறுப்பினர்கள் , உறுப்பினர் அல்லாத நடிகர்கள் , திரையுலக ஜாம்பாவான்கள் என  அனைவரும் கலந்துகொள்கிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios