Asianet News TamilAsianet News Tamil

அத்து மீறும் ஐஸ்வர்யாவின் அராஜகம்! பிக்பாஸ் வீட்டில் ஜனனிக்கு நேர்ந்த சோகம்! கொந்தளிக்கும் ரசிகர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி நாட்களை நெருங்க நெருங்க ஐஸ்வர்யாவின் அராஜகமும் அதிகரித்து கொண்டே போகிறது. இவர் மீது ரசிகர்கள் வெறுப்பை காட்டினாலும்... பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள் ஓவ்வொரு முறையும் ஐஸ்வர்யாவை காப்பாற்றி வருகிறார்கள்.

janani woods in bigboss home latest update
Author
Chennai, First Published Sep 21, 2018, 4:31 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி நாட்களை நெருங்க நெருங்க ஐஸ்வர்யாவின் அராஜகமும் அதிகரித்து கொண்டே போகிறது. இவர் மீது ரசிகர்கள் வெறுப்பை காட்டினாலும்... பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள் ஓவ்வொரு முறையும் ஐஸ்வர்யாவை காப்பாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் எப்போதும் போல் இந்த முறையும் போட்டியாளர்களுக்கு வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று போட்டியாளர்கள் விளையாடும் டாஸ்க்கிற்காக தயாராகி விளையாடும் போது  எதிர்ப்பாராது பல சண்டைகளும் நடக்கிறது.

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், ஐஸ்வர்யாவால் ஜனனியின் காலில் பலத்த காயம் ஏற்படுகிறது. உடனே ரித்விகா அவருடைய கால்களை பிடித்து ரத்தம் வராமல் பாதுகாக்கிறார். இதனால் கடுப்பான பாலாஜி ஐஸ்வர்யாவிடம் 'விளையாட தெரிந்தால் விளையாடு இல்லையென்றால் வெளியே போ என கூறுகிறார்' 

இதற்கு ஐஸ்வர்யா நான் விளையாடாமல் விடமாட்டேன் என கூறுகிறார்.  பின் பாலாஜி அவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட போது, நீங்கள் ரூல்ஸ் பிரேக் பண்றீங்க என கத்துகிறார். இதற்கு விஜி கத்தாதே என தன்னுடைய கோபத்தை காட்டுகிறார். கத்துவேன் என மிகவும் திமிராக பேசுகிறார் ஐஸ்வர்யா. பின் ஜனனியை சிகிச்சைக்காக அழைத்து செல்லும் கட்சியும் காட்டப்படுகிறது. ஐஸ்வர்யா இப்படி நடந்து கொண்டுள்ளதால் ஜனனியின் ரசிகர்கள் ஐஸ்வர்யாவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். 

இப்படி தொடர்ந்து, எதிர்ப்புகளை சம்பாதித்து வரும் ஐஸ்வர்யா இந்த வாரத்திலாவது வெளியேற்றப்படுவாரா, என பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios