சுச்சி லீக்ஸில் என் வீடியோ வெளியாகாதது பெரும் ஏமாற்றத்தை அளித்தது - அமலா பால்.
ஆபாச புகைப்படங்கள் மற்றும் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட சுச்சி லீக்ஸ் டிவிட்டர் பக்கத்தில் தன்னுடைய வீடியோ வெளியாகாதது பெரும் ஏமாற்றத்தை தந்ததாக நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.
சில நாள்களுக்கு முன்பு சுச்சி லீக்ஸ் டிவிட்டர் பக்கம் கோலிவுட்டில் உள்ளவர்கள் வயிற்றில் புளியை கரைத்தது. பாடகி சசித்ரா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் நடிகைகளின் ஆபாச புகைப்படம் மற்றும் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதில் நடிகை அமலா பால் வீடியோவும் வெளியிடப்படும் என்று தனது பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் சுசித்ரா தரப்பில் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தை யாரோ ஹேக் செய்துவிட்டனர் என்றும் ஆபாச வீடியோக்களுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் சுச்சி லீக்ஸ் பக்கம் முடக்கப்பட்டது குறித்து நடிகை அமலா பால் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.
“தன்னுடைய வீடியோ சுச்சி லீக்ஸில் வெளியாகும் என்று தான் ஆவலுடன் இருந்ததாகவும், ஆனால் வெளியாகாதது பெரும் ஏமாற்றத்தை தந்ததாகவும்” அமலா பால் கூறியுள்ளார்.
அமலா பால் தற்போது “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” பட ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளார்.
தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2, விஷ்ணு விஷாலின் மின்மினி, பாபி சிம்ஹா, பிரசன்னா உடன் திருட்டு பயலே ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.